அவிநாசி, மார்ச் 12- அவிநாசி அருகே கருமாபாளையத்தில் குடிபோதை நீக்கு சிகிச்சை மையத்தை ஞாயிறன்று திமுக சட்டமன்ற உறுப் பினர் க.செல்வராஜ் திறந்து வைத்தார். ஸ்மார்ட் கேரட் பவுண்டேஷன் என்ற பெயரின் மூலம் குடி போதை நீக்கு சிகிச்சை மற்றும் மனநல மறுவாழ்வு மையத்தின் புதிய கிளை அவிநாசி ஒன்றியம் கருமாபாளையத்தில் துவக் கப்பட்டுள்ளது. இதனை, திமுகவின் திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க. செல்வராஜ் திறந்து வைத்தார். இம்மையதில், குடியினால் ஏற்படும் தீமைகள், குடும்பத் தில் ஏற்படும் பிரச்சனைகள், மன அழுத்தம், உள்ளிட்டு குடி யினால் எந்தெந்த வகையில் பிரச்சனை ஏற்படுகிறது என்று அறிவுரை வழங்கப்பட்டு. குடிப்பழக்கத்தினால் அடிமையா னவர்களை குறிப்பிட்ட நாள் சிகிச்சை மையத்தில் தங்க வைத்து குடியிலிருந்து பூரணம் நலம் பெற்ற பிறகு இல்லத் திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வில், கருமாபாளையம் ஊராட்சி மன்ற தலை வர் பூங்கொடி சக்திவேல், திமுக மாநில தலைமை செயற் குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ராக்கியாபாளையம் நிர் வாகி ஜெகதீசன், சிபிஎம் அம்மாபாளையம் கிளைச் செயலா ளர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிகிச்சை மையத்தை 80569 59271, 6379482026 அலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.