districts

img

அனுப்பட்டி மக்கள் போராட்டம்: கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் நேரில் சந்திப்பு

திருப்பூர், ஜூன் 22 - பல்லடம் அருகே அனுப்பட்டி யில் இயங்கி வரும் கண்ணப்பன் இரும்பாலைக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் பொதுமக்களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வியாழனன்று நேரில் சந் தித்து பேசி உரிய உதவி செய்வதா கத் தெரிவித்தார்.  அனுப்பட்டியில் இயங்கி வரும் இரும்பாலை சுற்றுச்சூழலுக்கும், மக் களுக்கும் பெரும் கேடு விளைவிப்ப தாகவும், கால்நடைகள் வளர்ப்பதி லும், விவசாயம் செய்வதிலும் பெரும் ஆபத்தை விளைவிப்ப தாகவும், இந்த இரும்பாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை யினால் பெரும் மாசு ஏற்பட்டு மக்கள்  பாதிக்கப்படுவதாகவும் கூறி அனுப் பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொது மக்கள் பல்லடம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். முன்னதாக, தொடர்ந்து கடந்த  98 நாட்களாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.  இந்நிலையில் வியாழனன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை நேரில் சந் தித்து போராட்டத்தின் விவரங்கள் குறித்தும் ஆலையின் நடவடிக்கை கள் குறித்தும் கேட்டறிந்தார்.  மேலும், மாவட்ட நிர்வாகத்தோடு  உடனடியாக பேசி பொதுமக்களுக்கு உரிய உதவிகளை செய்வதாகவும் கூறினார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர். பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வை.பழ னிச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முரு கேஷ், முருகசாமி, ஏ.கே.செந்தில்கு மார் மற்றும் மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.