districts

img

மதுபான கடையை உடைத்ததாக பொய் வழக்கு மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கத்தினர் விடுதலை

அன்னூர், மே 27- அன்னூர் அருகே பொன்னே கவுண்டன் புதூர் பகுதியில் டாஸ் மார்க் கடையை உடைத்ததாக மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தி னர் மீது அன்னூர் காவல்துறையி னர் பொய்வழக்கு புனைந்த நிலையில், குற்றச்சாட்டில் உண்மை யில்லை என கோவை நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய் தது. கேவை, அன்னூர், மசக்கவுண் டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள பொன்னேகவுண்டன் புதூ ரில் 2016 ஆம் ஆண்டு டாஸ்மாக் மது பான கடை அமைக்க டாஸ்மாக் நிர் வாகம் முயற்சி மேற்கொண்டது.  இதனையறிந்த மார்க்சிஸ்ட் கட்சி  மற்றும் இந்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுபான கடை அமைக்க கூடாது என மாவட்ட  ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளி டம் தொடர்ந்து மனு அளித்து வந்த னர். ஆனால், அனைத்து எதிர்ப்புக ளையும் மீறி கடந்த அதிமுக அரசு பொன்னே கவுண்டன் புதூரில்,  மதுபான கடை அமைக்கப்பட்டது. இங்கு மதுபான கடை அமைக்கப் பட்ட பின் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளானது டன், அடுத்தடுத்து சாலை விபத்து கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங் கேறின. இது இங்குள்ள பொதுமக் களை ஆவேசமடைய செய்த நிலை யில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சிலர் மதுபான கடையினை அடித்து சேதப்படுத்தி னர்.

இந்நிலையில், இந்த சம்பவத் திற்கு டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடர்ந்து போராடிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தினர் தான் காரணம் எனக் கூறி அன்னூர் காவல்துறையினர் வாலிபர் சங்கத் தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் கனகராஜ் (எ) மகேந்திரன், மௌன மூர்த்தி, சிவ குமார், ரஞ்சித்(எ) பத்ரன், கணேஷ்,  குமரேசன், பிரதீப், பிரசாந்த், ஜெயக் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது வழக் குப் பதிவு செய்தது. மேலும், அவர் களை கைது செய்து பத்து நாட்களுக் கும் மேலாக சிறையில் அடைத்த னர். இவ்வழக்கு கோவை நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த நிலை யில், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு ஆதரவாக அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மாசேதுங் மற்றும் கோபால் ஆஜ ராகி வாதிட்டனர். இதில் வெள்ளி யன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலை யில், வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட அனைவரும் குற்றமற்ற வர்கள் என நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித கட்டணமும் பெறாமல் வழக்கை சிறப்பாக வாதடி விடுதலை பெற்றுத்தந்த வழக்கறிஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் பாராட்டு மற்றம் நன்றி தெரிவித்தனர்.