நாமக்கல், டிச.28- சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் இன மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆயில்பட்டி, கார்கூடல் பட்டி, மங்களபுரம் ஊராட்சிக்குட் பட்ட கிராமங்களில் பல தலை முறைகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடி யின பிரிவைச் சேர்ந்த இவர்கள் மலை சார்ந்த பகுதியை நம்பி தங் களுடைய வாழ்க்கையை மேற் கொண்டு வருகின்றனர். குறிப் பாக, தேனெடுத்தல், கிழங்கு தேடு தல் உள்ளிட்ட தங்களுடைய பாரம் பரிய தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இம்மக்கள் பொரு ளாதார ரீதியாகவும், சமூக ரீதியாக வும் கல்வியிலும் மிகவும் பின் தங்கி உள்ளனர். தற்பொழுது படிப் படியாக இவர்களின் குழந்தைகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இச்சூழலில் கல்வி நிலையத் தில் கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அரசின் சலு கைகளைப் பெற இருளர் பழங்குடி இன சாதிச் சான்றிதழ்கள் மிகவும் அத்தியாவசிய தேவையாக உள் ளது. ஆகவே, கடந்த பத்தாண்டுக ளுக்கும் மேலாக இம்மக்கள் தங்க ளின் குழந்தைகளுக்கு பழங்குடி யினர் சாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வரு வாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல் வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இருப் பினும், தற்போது வரை சாதி சான் றிதழ் வழங்காமல் அரசு அதிகாரி கள் இழுத்தடித்து வருவதால் அச் சமூக மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த மூன்று கிரா மங்களிலும் சுமார் 200க்கும் மேற் பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். சாதிச் சான்றிதழ் இல்லாததால் இது வரை இவர்கள் குடும்பத்தில் ஒரு வர் கூட உயர்கல்விக்கோ, அரசின் வேலைவாய்ப்பையோ பெற முடி யவில்லை. இதனால் மாணவர் கள் தங்களுடைய கல்வியை தொடர முடியாமல் கூலி வேலைக் குச் செல்லக்கூடிய நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், பாதிக் கப்பட்ட இருளர் மக்கள் செவ்வா யன்று இந்திய மாணவர் சங்கத்தி னர் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் கொல்லிமலையில் மருத் துவ முகாமை துவக்கி வைக்க சென்றதாக அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்ப முயன்றனர். இத னால் ஆவேசமடைந்த மாணவர் கள், சாதி சான்றிதழ் வழங்குவதற் கான முகாம் தேதியை மாவட்ட ஆட்சியர் அறிவித்தால் மட்டுமே தாங்கள் வீடுகளுக்கு செல்வோம் எனக்கூறி ஆட்சியர் அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செயலாளர் டி.சரவணன், மாவட்ட தலைவர் எம்.தேன்மொழி, மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சின்னு சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இத னால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகி றது.