அவிநாசி, ஜூன் 10 – அவிநாசியில் தனியார் பூச்சி மருந்து கடையிலிருந்து வாங்கிவந்த பூச்சி மருந்தால் பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகள் முற்றிலும் கருகியுள்ளது. இதைக்கண்டு விவ சாயி வேதனை அடைந்தார். அவிநாசி அருகே தண்டுக்காரன் பாளையம் ஊராட்சி, குமாரபாளை யம் பிள்ளையார் கோயில் தோட் டத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (73). விவசாயத்தை தொழிலாகக் கொண் டுள்ள இவர், தனது தோட்டத்தில் காலிஃப்ளவர் பயிரிட்டுள்ளார். இந்நி லையில் தனியார் பூச்சி மருந்து கடை யில் வாங்கி வந்த பூச்சு மருந்தால், பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடி கள் முற்றிலும் கருகியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, எனது தோட்டத்தில் அரை ஏக்கரில் சுமார் 6 ஆயிரம் காலிஃப்ளவர் நாற் றுக்கள் பயிரிட்டிருந்தேன். 90 நாளில் சாகுபடி ஆகும் காலிஃப்ளவர், பயி ரிட்டு 60 நாட்களை கடந்தும் செடி யில் புழு விழுந்தது. உடனடியாக, காலிஃப்ளவர் செடியின் இலைகளை பறித்துக் கொண்டு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் உள்ள தனியார் பூச்சி மருந்து கடைக்கு சென்று விப ரம் கூறி பூச்சி மருந்து வாங்கி வந் தேன். அந்த மருந்தை தெளித்த 4 நாட் களுக்குள் செடிகள் அனைத்தும் கருகிவிட்டன. காலிஃப்ளவரும் அடுத்த கட்ட வளர்ச்சி அடைய வில்லை. 6 ஆயிரம் நாற்றுக்கள் பயி ரிட்டதில், ஆயிரம் காலிஃப்ளவர் கூட மீதமாகவில்லை. ஒரு காலிஃப்ளவர் ரூ.40 க்கு வியாபாரிகள் தோட்டத்தி லேயே வந்து கொள்முதல் செய்வர். இப்படி பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், செடிகள் கருகி ரூ.2 லட் சத்திற்கு மேல் நட்டமாகியுள்ளது, என் றார். மேலும், இதுகுறித்து முதல்வ ரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப் பியுள்ளதாகவும், தனியார் மருந்து விற்பனையாளர் மீது நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத் தில் புகார் கொடுப்பதாகவும் தெரி வித்தார்.