ஈரோடு, செப்.17- பெருந்துறை அருகே தலித் மாணவர் ஒருவரை சாதி ஆதிக்க திமிரோடு செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த சக்திவேல் – செல்வி தம்பதியின் மகன் வசந்த். அருந்ததியர் களான இவர்களது மகன் வசந்த் மருத்துவ ராகும் கனவோடு இரண்டாவது முறையாக நீட் தேர்விற்கு படித்து வருகிறார். இந்நிலை யில். வெள்ளியன்று நண்பகலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரில் உள்ள மளி கைக் கடைக்குச் சென்று 2 பாக்கெட் சோடா உப்பு வாங்கியுள்ளார். அதில் ஒன்றை திருப் பிக் கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க லாம் என எண்ணிய போது, கடையிலிருந்த சுமதி என்பவர் அதனை வாங்கவில்லை. மேலும், “சாதியை சொல்லி, நீ தொட்டதை நான் தொட மாட்டேன்” என்று சுமதி கூறியுள் ளார். அதற்கு “சாதியை சொல்லாதிங்க, காசை கொடுங்க நான் வேறு கடையில் வாங் கிக் கொள்கிறேன்” என்று வசந்த் கேட்டுள் ளார். இதனால் ஆத்திமடைந்த சுமதி பணத்தை தூக்கி வீசியுள்ளார். இதையடுத்து வசந்த் பணத்தை எடுக்க சென்ற போது அங்கிருந்த கடையின் உரி மையாளரும், சுமதியின் கணவருமான கொளத்தான்வலசைச் சேர்ந்த கொழந்த சாமி, “சாதி சொல்லி பேசினால் என்னடா பண் ணுவ” என்றும், கெட்ட வார்த்தையிலும் மிரட் டியுள்ளார். அதற்கு வசந்த் “நான் டாக்டரா கப் படிச்சிட்டிருக்கேன், (டீசன்டா) ஒழுக்கமா பேசுங்க” எனக் கூறியுள்ளார். அப்போது கொழந்தசாமி “கூலிக்காரனுங்க டாக்டருக் குப் படிக்கிற அளவிற்கு வளந்திட்டீங்களா” என்று வசந்தின் சட்டையப் பிடித்துள்ளார். சட்டையைப் பிடிக்காதீங்க விடுங்க என்று வசந்த் கூறியதற்கு, கொழந்தசாமி “சட்டை யைப் பிடிப்பதென்ன செருப்பாலயே அடிப் பேன்” என்று காலில் போட்டிருந்த செருப் பைக் கழற்றி வசந்தின் வலது கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அடி வாங்கிய வசந்த் போலீசில் புகார் செய்வேன், என்றார். “உனக்கு போலீஸ் மட்டும் தான் தெரியும். எனக்கு எல்லாம் தெரியும்” என்று கொழந்த சாமி சத்தம் போட்டுள்ளார். போலீசில் கேஸ் கொடுத்தால் ஊரில் இல்லாமல் செய்து விடு வேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள் ளார்.
இதையடுத்து அருகிலிருந்த கடைக் காரர்கள், அக்கம்பக்கத்தினர் மாணவனைக் காப்பாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பயந்து போன மாணவர் தந்தை யிடம் நடந்த விபரங்களைக்கூறி அதுகுறித்து காவல்துறையில் புகார் எதுவும் கூறவில்லை. ஆனால், அவருக்கு மறுநாள் தலைவலி, வாந்தி வர ஆரம்பித்தது. இதனால் 108 அவசர வாகனம் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலு தவி பெற்று அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பட்டி யலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் 3 பிரிவுகளிலும், இந்திய தண் டனை சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழும் வழக் குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டக் குழு விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.ஏ.விஸ்வநாதன் மற் றும் கோபால்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டுள்ள மாணவரைச் சாதியைச் சொல்லி திட்டியும், செருப்பால் அடித்த குற்ற வாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கேட்டுக் கொண்டுள்ளதாக மாவட்டச் செய லாளர் எம்.அண்ணாதுரை தெரிவித்துள் ளார்.