சூலூர், டிச. 4- தலித் மூதாட்டி உடலை பொது மயா னத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சாலையின் நடுவே உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்னக் கரசம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ரங்கம் மாள். 102 வயது தலித்தான இவர் சனியன்று காலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந் தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் ரங்கம்மாள் உடலை காரேகவுண்டம்பா ளையம் சாலையில் உள்ள பொது மயா னத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென் றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து ரங்கம்மாள் உடலை சாலையின் நடுவில் வைத்து உறவி னர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா, அன்னூர் வாட்டாட்சியர் தங்கராஜ், மற்றும் ஊராட்சி தலைவர் தங்க ராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ரங்கம்மாள் தரப்பினர் கூறுகையில், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயா னத்தில் பாலம் கட்டி சுருக்கி விட்டனர். அங்கு புதைப்பதற்கு இடமில்லை. எனவே இங்கு தான் புதைப்போம் என்றனர். இதற்கு மற் றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட தால் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து அதிகாலை 4.30 மணி அளவில் ரங்கம்மாள் உடலை ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தில் புதைப்பது என முடிவு செய்யப்பட்டது மேலும், அரசு தரப்பில் மயானத்தில் புதைப் பதற்கு தேவையான இடத்தை உருவாக்கி தந்தனர். இதனையடுத்து போராட்டத்தை கை விட்டு ரங்கம்மாள் உடலை புதைத்தனர்.