districts

img

உணவில் மலத்தை அள்ளி வீசியதாக குற்றச்சாட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தலித் குடும்பத்தினர் கதறல்

சேலம், மே 5- ஆதிக்க சாதியை சேர்ந்தவர் கள் உணவில் மலத்தை அள்ளி வீசி யதாக சேலம் ஆட்சியர் அலுவல கத்தில் தலித் குடும்பத்தினர் புகார்  தெரிவித்து, கதறிய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தேவண்ண கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கமலஹாசன், ராதிகா குடும்பத்தினர் கடந்த 50  ஆண்டுகளாக அரசு புறம்போக்கு  நிலத்தில் வசித்து வருகின்றனர். தலித் மக்களான இவர்கள், முறை யாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வரி யையும் 47 ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர் கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சிலர் ராதிகாவின் குடும்பத்தை அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கடந்த சில ஆண்டுகளாகவே பல் வேறு அச்சுறுத்தல்களையும், இன் னல்களையும் கொடுத்து வந்துள்ள னர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டிற்கு வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு பேர், குழந் தைகள் உணவு அருந்தி கொண்டி ருந்த போது, உணவில் மலத்தை  அள்ளி வீசியும், ராதிகா மற்றும் அவ ரது பாட்டி சுருட்டையம்மாள் இரு வரையும் சரமாரியாக தாக்கி ஆடை களை களைத்ததாக கூறப்படு கிறது. இது சம்பந்தமாக பாதிக்கப் பட்டவர்கள் நியாயம் கேட்ட பொழுது, வீட்டின் அருகே இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தும் வீட் டில் இருந்த இரண்டு குழந்தை களையும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர்.

இத னால், செய்வதறியாமல் தவித்த பாதிக்கப்பட்டவர்கள், சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் தெரி வித்துள்ளனர்.  இந்த புகார் குறித்து சங்ககிரி காவல்துறையினர் எந்த ஒரு நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  அனைவரும் ஆதிக்க சமூகத்தின ருக்கு ஆதரவாக செயல்படுகின்ற னர் என ஆட்சியரிடம் கண்ணீரோடு  புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் சம் பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட்டார்.  புதுக்கோட்டை, வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டி யில் மலம் கலந்த விவகார தமிழ் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ள நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தில் உணவில் மலம் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. தேவண்ண கவுண்டனூர் பகுதி யில் நடைபெற்ற இச்சம்பவத் திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்டக் குழு கடும் கண்டனத்தை தெரிவித் துள்ளது. உடனடியாக சம்பந்தப் பட்ட ஆதிக்க சாதியை சேர்ந்தவர் களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.