அவிநாசி, ஏப்.22- அவிநாசி அருகே திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயணம் குழுவிற்கு வெள்ளி யன்று உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் வேலைவாய்ப்பு அடிப்படை உரி மையாக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமை யாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும், ஓய்வு பெற்ற வர்களை மீண்டும் பணி நியமனம் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட் டுறவுத் துறையினை விரிவுபடுத் தக் கோரியும், தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதுடன், பணி பாது காப்பை உறுதிப்படுத்த வேண் டும். பெண்களுக்கு பணியிடங்க களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, கோவை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளிலிருந்து சைக் கிள் பயணம் வியாழனன்று துவங்கி யது.
இந்நிலையில், கோவையிலி ருந்து புறப்பட்ட வெண்கொடி வீரர்க ளின் சைக்கிள் பயணம், திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூரை அடைந்தது. அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து, ஆட்டை யாம்பாளையம், முத்து செட்டி பாளையம், அவிநாசி-சேவூர் சாலை, காசிகவுண்டன்புதூர், கரு ணைபாளையம் பிரிவு, வஞ்சிபா ளையம் உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்ட வர்களுக்கு வாலிபர் சங்க நிர்வா கிகள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ், திருப்பூர் மாவட்ட செயலா ளர் மணிகண்டன், கோவை மாவட்ட செயலாளர் கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் பாரதி, கற்ப கம் உள்ளிட்டோருக்கு அப்பகுதி பொதுமமக்கள் வெற்றி திலகமிட்ட னர். இதில், வாலிபர் சங்க அன்னூர் ஒன்றிய நிர்வாகிகள் சரவணன், அர் ஜுன் பிரதீப், அன்னூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது முசிர், மணி கண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் அகமது கபீர், சத்தியராஜ், சுகுமார், அவிநாசி ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி, வடிவேல், பன்னீர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க ஒன்றிய நிர்வாகி அருண், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, விவசாயி கள் சங்க மாவட்ட நிர்வாகி வெங்க டாசலம், விவசாய தொழிலாளர் சங் கம் மாவட்ட நிர்வாகி சண்முகம், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்து சாமி, மாவட்ட நிர்வாகிகள் பழனிச் சாமி, மோகனசுந்தரம், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் சாமியப்பன், முருகன் பூண்டி நகர மன்ற கவுன்சிலர் தேவ ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.