சேலம், செப்.17- தொடர் விடுமுறை காரணமாக சேலம் பேருந்து மற்றும் ரயில் நிலை யங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நாடு முழுவதும் திங்களன்று (இன்று) விநாயகர் சதுர்த்தி கொண் டாடப்படுகிறது. இதையொட்டி திங்க ளன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு சனியன்று முதல் திங்களன்று வரை என 3 நாட் கள் தொடர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஞாயிறன்று முகூர்த்த நாள் என்பதால், சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர் கள் வெள்ளியன்று இரவு முதல் தங்க ளது சொந்த ஊர்களுக்கு குடும்பத் தினருடன் புறப்பட்டு சென்றனர். பொது மக்கள் வசதிக்காக சேலத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந் துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சனியன்று முதல் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப் பட்டது. இதன்பின் இரவிலும் பயணி கள் கூட்டம் அலைமோதியது. பேருந் துகளில் இடம் பிடிப்பதற்காக பயணி கள் ஒருவரையொருவர் முண்டி யடித்துக்கொண்டு ஏறினர். இதே போல் சேலம் வழியாக வெளியூர்க ளுக்கு சென்ற ரயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரயிலில் முன்பதிவு இல்லாத பொது பெட்டி களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வெளியூர் களிலிருந்து சேலத்திற்கு வந்த பொது மக்கள் கூட்டமும் அதிகளவில் காணப் பட்டது. தொடர்ந்து ஞாயிறன்று அதி காலை முதல் சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்வோர் எண்ணிக் கையும், வெளியூர்களில் இருந்து சேலத்திற்கு வருவோர் எண்ணிக்கை யும் அதிகரித்தப்படி இருந்தது. குறிப்பாக, ஞாயிறன்று சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். வழக்கமாக இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்த னர். குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப் பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங் களுக்கு அதிகப்படியான மக்கள் பய ணம் செய்தனர்.
இதைத்தவிர விழுப் புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட் டங்களிலிருந்து பொதுமக்கள் விநா யகர் சதுர்த்தியை யொட்டி பொருட் கள் வாங்குவதற்காக சேலம் டவுன் ரயில் நிலையம், ஜங்சன் ரயில் நிலை யத்திற்கு வந்தபடி இருந்தனர். அதே போல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் ரயில்கள், பேருந்து கள் மூலமாக சேலம் வந்தபடி இருந்த னர். இதேபோல் கொளத்தூர், மேட் டூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், சங்க கிரி, எடப்பாடி, கெங்கவல்லி, நங்க வள்ளி, ஏற்காடு, ஆத்தூர், தலை வாசல், வீரபாண்டி, வீராணம், வாழப் பாடி, அயோத்தியாப் பட்டணம் உட் பட உள்ளூர் பகுதி மக்களும் விநா யகர் சதுர்த்தி பொருட்கள் வாங்க வும், வெளியூர்களுக்கு செல்லவும் சுவர்ணபுரி, மெய்யனூர் ரோடு, புதிய பேருந்து நிலையம், சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் பேருந்து நிறுத்தம், கடைவீதி, பழைய பேருந்து நிலை யம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, குகை, அம்மாப் பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், சூரமங்கலம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ் வொரு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றது. போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தியும், கண் காணித்தப்படியும் உள்ளனர். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் பாது காப்பு பணியில் ஏராளமான போலீ ார் ஈடுபட்டு வருகின்றனர்.