districts

img

விதிமீறல், இதர விதிமீறல்‌ என மறுக்கப்படும் பயிர்க்கடன் தள்ளுபடி; பரிதவிக்கும் விவசாயிகள்

தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி பெற முடியாமல் விவசாயிகள் பலர் பரிதவித்து வருகின்றனர். விதிமீறல், மோசடியாக பயிர்க்கடன் பெற்று இருக்கிறீர்கள், ஆகவே தமிழக அரசு அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி சலுகை இல்லை என்று கை விரிக்கிறது திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை.

அது என்ன விதிமீறல், அதிலும் இதர விதிமீறல் என விவசாயிகள் தங்களது கூட்டுறவு சங்கத்தில் உள்ள  பணியாளர்களிடம் கேள்வி கேட்டால் உங்களுக்கும் தள் ளுபடி வந்துவிடும் என்று சமாளித்து வருகின்றனர். “பக் கத்து காட்டுக்காருக்கு ரூ.3 லட்சம் தள்ளுபடி, நான்  பெற்ற ரூ.63 ஆயிரம் தள்ளுபடி இல்லேன்னா எப்படி?  என கேட்டால் உங்களது, ஃபயில் சென்னைக்கு போயி ருக்கிறது, வந்துரும் என சொல்லி வருகிறார்கள். பயி ருக்கு உரம் இட முடியல, நிலத்தில் ஒரு பகுதியில் வண் டிப்பாதை கேட்கிறார்கள், கூட்டுறவு சங்கத்தில் நிலம் அடமானத்தில் இருப்பதால், விற்க முடியல எனவும், கிடைத்த மழைக்கு தென்னை மரத்திற்கு உரம் வைக்க ணும், கடும் மழையால் நோய்க்கு மருந்து வாங்க வழி யில்ல, இரண்டு ஏக்கர் வைத்துக்கொண்டு கூலிக்கும் போய் தான் வாழ்ந்து வந்தேன். கடன் தள்ளுபடி எனக்கு பயன்படும் என நினைச்சு இருந்தேன்”. இந்த  குரல்கள் உடுமலை தாலுக்கா, மடத்துக்குளம் தாலு காவை சேர்ந்த விவசாயிகள் கண் கலங்கியபடியே ஒருவ ருக்கு ஒருவர் பேசி வருகின்றனர்.

தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன்

தமிழ்நாடு அரசு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பயிர்க் கடன் தள்ளுபடி செய்து அறிவித்து இருந்தும், அந்த அறிப்பை ஒட்டி தேர்தலின் போதும் தமிழக முதல்வர்‌ விவ சாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய் யப்படும் என பல்வேறு இடங்களில் தெரிவித்து இருந்தார் கள். சட்டமன்றத் தேர்தலுக்கு பின் திமுக ஆட்சி பொறுப் பிற்கு வந்த பின், விவசாய பயிர் கடன் நூறு சதவீத ஆய்வு,  அயல் மாவட்டத்தினரை வைத்து செய்வதாக அறிவித்து இருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் அவிநாசி, திருப்பூர், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களை சேர்ந்த 50  ஆயிரத்து 87 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கினர். ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஊத்துக்குளி, காங் கேயம், தாராபுரம் தாலுகாக்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு பயிர்க்கடன் வழங் கினர். இதில் தமிழ்நாடு அரசு பயிர் கடன் தள்ளுபடி அறி விப்பின்படி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக ளில் கடன் பெற்ற அனைவருக்கும் அயல் மாவட்டத்தி னர் தணிக்கை செய்து பயிர்க்கடன் தள்ளுபடி சான்றி தழ் 2021 செப்டம்பர் மாதமே வழங்கி புதிதாக பயிர்க்கடன் கள் வழங்கி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் இன் னொரு பகுதியில் கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்ற விவசாயிகளில் 18 ஆயிரத்து 391  விவசாயிகள் தான் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தகுதியா னவர்கள் என தெரிவித்திருந்தனர். 

அமைச்சரிடம் முறையீடு

இதுகுறித்து கடந்த செப்.25 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளில் 99 சதவீத விவசாயிக ளுக்கு பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி உள்ள னர். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 696  விவசாயிகளுக்கு விதிமீறல் என்ற பெயரில் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காததையும், அயல் மாவட்ட அலுவ லர்கள் ஆய்வு செய்ததில் பெரும் முறைகேடுகள் இருப்ப தாக சுட்டிக்காட்டி பயிர் கடன் தள்ளுபடியில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானவர்கள் பயன டைய முடியவில்லை என்பதை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்ப தாக ஆட்சியர் தெரிவித்தார். கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், அக்.4 ஆம் தேதியன்று ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரும் திரளாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கூடினர். அன் றைய தினமே மாவட்ட ஆட்சியரகத்தில்  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கு வதாக அறிவித்து இருந்தார். அதன்படி சான்றிதழ் களை வழங்கிவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர், சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகளையும் நேரில் சந்தித்து அனைவருக்கும் தள் ளுபடி கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு செய்தனர். ஆட்சிய ரும் தள்ளுபடி ஆகிவிடும், நீங்கள் புதிய கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். 

தமிழக விவசாயிகள் சங்கம் தலையீடு

இதன்பின், அன்று மாலையே தொடக்க வேளாண்மை சங்க செயலாளர்கள், அனைவருக்கும் தள்ளுபடி சான்றிதழ்கள் சங்க வாரியாக கொடுத்து விட் டார்கள் என்று தெரிவித்து வந்தனர். ஆனால், மறுநாள்  யாருக்கும் சான்றிதழ் வழங்க வேண்டாம், சான்றிதழ் வழங்கும் விழா வைத்து கொடுப்பதாக தெரிவித்து வந்த னர். எங்கும் வெளிப்படையாக சான்றிதழ்கள் வழங்கா மல் இருந்து வந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், செயலாளர் ஆர்.குமார், உதவித்தலைவர் எஸ். பரமசிவம் ஆகியோர் மாவட்ட இணைப்பதிவாளரை சந் தித்து கேட்டபொழுது, விதிமீறலில் அடங்கலே கொடுக் காத 31 ஆயிரத்து 317 பேருக்கு கடன் தள்ளுபடி என்றும்,  கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் கொடுத்த 3,184 பேருக்கு தள்ளுபடி இல்லை என தெரிவித்தனர். மாவட்டத்தில் இத்தனை எண்ணிக்கையான விவசாயிகள் தவறு செய்து இருக்க மாட்டார்கள் என்றும், கிராம நிர்வாக அதிகாரிகள் பயிர் வாரியான கணக்கே எடுப்பதில்லை என்பதையும் தெரி வித்து‌ அடங்கலை மட்டும் பார்த்து கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை, பெரும் பகுதியான விவசாயிக ளுக்கு என்ன பயிருக்கு எவ்வளவு கடன் என்பதே தெரி யாது, கூட்டுறவு பணியாளர்கள் கொடுப்பதை பெற்றுக் கொள்வதுதான் பழக்கம் என தெரிவித்தனர். உடுமலை கோட்டாட்சியர் மூலம் தமிழக முதலமைச் சருக்கு தனித்தனியாக விவசாயிகள் தங்களது பயிர்க் கடன் விபரம் நேரில் ஆய்வு செய்யுங்கள், எனக்கு விவசா யம் தவிர வேறு எதும் தொழில் இல்லை என அவரவர் களின் வாழ்நிலை குறித்து தெரிவித்து 480 விவசாயி கள் பயிர்கடன் தள்ளுபடி வழங்கக்கோரி மனு அளித்த னர். ஆனால், இதுநாள் வரையும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தற்போது தாராபுரம் துணை  பதிவாளர் மூன்று மாதங்களாக 10க்கும் மேற்பட்ட மனுக் கள் வழங்கியபின் இதர விதிமீறல் என்று சொல்லி அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தனது பதிலில் தெரிவித்துள்ளார். 100 சதவீதம் ஆய்வு செய்த அலுவலர் கள் அழைத்து வந்து விவசாயிகளின் நிலங்களில் பார் வையிட சொன்னார்கள். 

இதுதான் விதிமீறல், இதர விதிமீறலா?

குறிப்பாக உடுமலை, தளி தொடக்க வோளாண்மை கூட்டுறவு வங்கியிலிருந்து வேலுசாமி மகன் குமாரசாமி என்பவருக்கு 3 ஏக்கர் 89 சென்ட் உள்ளது. சிறு விவசாயி, தென்னை பயிர் செய்துள்ளார். ஒரு லட்சத்து 25 ஆயிரம்  கடன் கொடுத்துள்ளனர். இவரது தோப்பில் மாட்டுத் தீவனத்திற்காக மக்காசோளம் பயிர் செய்துள்ளார். ஆனால், இவர் தென்னைக்கு இரண்டாயிரம் ரூபாய் அதி கம் கடன் பெற்றுவிட்டார். ஆகவே, இதர விதிமீறல் அடங்கலில் ஊடுபயிர் குறிப்பிடாததால் தள்ளுபடி இல்லை என்கின்றனர். இன்னொரு விவசாயி செஞ் செல்லப்பகண்டன் புதூர் தொடக்க வோளாண்மை கூட் டுறவு சங்கத்தில் விளாமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 2 ஏக்கர் 67 சென்ட் தென்னை சாகுபடிக்கு 88  ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளனர். இதில் நான்கா யிரம் ரூபாய் அதிகமாக கடன் கொடுத்துள்ளனர். இது  இதர விதிமீறல். தென்னைக்கு எவ்வளவு கடன் என்ற  விபரம் இவருக்கு தெரியாது. தென்னையில் ஊடு பயி ராக மக்காச்சோளம் பயிர் ஒரு ஏக்கர் செய்திருக்கிறார். 2  கறவை மாடுகளை வைத்து பால் கறவை மூலம் வாழ்ந்து வருகிறார். இவர் விதி மீறிவிட்டார், தள்ளுபடி இல்லை  என்கிறது அயல் மாவட்ட ஆய்வு.  மடத்துக்குளம் தாலுகாவில் 12 வங்கிகள் இருக்கின் றன. அதில், ஆறு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக் கும் தள்ளுபடி, ஆறு வங்கிளில் 1200 பேருக்கு தள்ளுபடி இல்லை. உடுமலை தாலுக்காவில் குடிமங்கலம் ஒன்றி யத்தில் 90 சதமானவர்களுக்கு கடன் தள்ளுபடி. உடு மலை ஒன்றியத்தில் 60 சதமானவர்களுக்குதான் தள்ளு படி. 40 சதமான 1700க்கும் மேற்பட்டவர்களுக்கு தள்ளு படி இல்லை. திருப்பூர், அவிநாசி, பல்லடம் தாலுகாக ளில் அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி. இந்த மோசடித்தனமான ஆய்வு குறித்தும், சரியாக கவனிக்க படவில்லை என்ற கோபத்தில் மேற்கொண்ட அயல் மாவட்ட ஆய்வாளர்களின் முறைகேடான செயல்கள் குறித்தும் கடந்த மூன்று மாத காலமாக விவசாய சங்கங் கள் சார்பிலும், விவசாயிகள் தனிப்பட்ட முறையிலும் மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிபிரிவிற்கு மனுக்கள் அனுப்பியும் எவ்வித பயனும் இல்லாமல் உள்ளது.

இதர விதிமீறல் செய்தது கூட்டுறவு நிர்வாகமே…

கடந்த பல ஆண்டு காலமாக‌ கிராம நிர்வாக அலுவலர் கள் பயிர்வாரி கணக்கு எடுப்பதற்கு விவசாய விளை நிலங்களுக்குச் சென்று பதிவு செய்வதில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கலை மட்டும் வைத்து கொண்டு ஆய்வில் இதர விதிமீறல் என தெரிவிப் பது, சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி  கிடைக்காமல் செய்துள்ளது விவசாயிகளை வஞ்சிக் கும் செயல் ஆகும். தொடக்க வோளாண்மை கூட்டுறவு  சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வைத் துக் கொண்டு சிலருக்கு கொடுப்பது, சிலருக்கு சான்றி தழ் கொடுக்காமலே புதிய பயிர் கடன் கொடுப்பது என மூடுமந்திரமாக செயல்பட்டு வருகிறது. பரவலாக விவ சாயிகளிடம் பணம் பறிப்பு நடவடிக்கைகளும் நடத்திக்  கொண்டுள்ளனர். எங்கும் போகாதீங்க உங்களுக்கு தள் ளுபடி ஆகிவிடும் என சொல்லி ஏமாற்றி வருகின்றனர். போராடினால் பணம் பறிக்க முடியாது என்பதால் போராட்டத்திற்கு போகாமல் இருக்க, இன்று, நாளை  என இனிக்க, இனிக்க பேசி வருகின்றனர். இதர விதிமீறல் செய்தது கூட்டுறவு நிர்வாகமே தவிர, விவசாயிகள் அல்ல என்பதுடன், தென்னையில் கோகோ போன்ற பன் னாட்டு நிறுவனங்களின் தேவைக்குரியதை ஊடுபயிர்  செய்தால் மானியமும், கடனும் வழங்குவார்கள். பால்  தரும் மாட்டிற்கு தீவனம் பயிர் செய்து இருந்தால் பதிய வும் மாட்டார்கள், கடனும் வழங்க மாட்டார்கள்.

ஜன.4 ஆம் தேதியன்று காத்திருப்பு போராட்டம்

எனவே, விவசாயிகளின் உண்மை நிலை அறியாமல், விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்யாமல் விதி மீறல் என்று தெரிவித்து இருப்பதை தமிழக அரசு உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் 3 ஆயிரத்து 184 பேர் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் கிடைக்காமல் பெரும் மனவேதனைக்கு உள் ளாகி உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் சான்றிதழ் வழங்கி புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் எனக்கோரி ஜன.4 ஆம் தேதியன்று (நாளை) உடுமலை காந்தி சிலை  அருகில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்  தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு கோரிக்கையை நிறைவேற்ற உழவர்கள் பெருந்திர ளாக அணிதிரள உள்ளனர்.

எஸ்.ஆர்.மதுசூதனன்,
திருப்பூர் மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.