districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மறுவாழ்வு மையத்திலிருந்த முதலை உயிரிழப்பு

தருமபுரி, ஜன.11- ஒகேனக்கல்லில் முதலைகள் மறுவாழ்வு மையத்தில், உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி பெண் முதலை உயிரிழந் தது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து  வரப்பட்ட முதலைகள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின் றன. இம்மையத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு, சிறியது முதல் வயதிற்கு ஏற்றவாறு முதலை கள் பிரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனும திக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மையத்தில் சக முத லைகள் கடித்ததில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் முதலை ஒன்று உயிரிழந்தது. இதுகுறித்து முதலைப் பண்ணை பராமரிப்பாளர் கொடுத்த தகவலின் பேரில், ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்கு மார் அங்கு சென்று பார்வையிட்டார். பின்னர் கால்நடை மருத் துவர் உதவியுடன் பெண் முதலை உடற்கூறாய்வு செய்யப் பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

வாழப்பாடியில் புளி மகசூல் அதிகரிப்பு

சேலம், ஜன.11- வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி  மகசூல் அதிகரித்துள்ளதால், விலை குறையு மென வியாபாரிகள், நுகர்வோர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம, வாழப்பாடி சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் மலைப்பகு தியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள் ளன. வாழப்பாடி பகுதிகளில் 200க்கும் மேற் பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களிலும், வாழப்பாடி, அயோத் தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளை யம், ஏத்தாப்பூர், பேளூர் பகுதி கிராமங்களி லும் தரிசு நிலங்களில் பாரம்பரிய முறை யிலும், குறைந்த நாள்களில் கூடுதல் மக சூல் கொடுக்கும் சதைப்பற்று மிகுந்த புளிய மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ள னர். இப்பகுதிகளில் விளையும் புளி சமைய லுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச்சுவை யுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களும், உணவகங் கள், சிற்றுண்டி உரிமையாளர்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஜனவரி மாதத்திலேயே புளிய மரங்க ளில் ஏராளமான புளியங்காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன. இந் தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் புளி அறு வடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், விற்ப னைக்கு வரத்து அதிகரித்து விலை குறையு மென வியாபாரிகள், நுகர்வோர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியில் நான்கு ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்ற முடிவு

உடுமலை, ஜன.11- உடுமலை நகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய் யும் வகையில், கடந்த மாதம் ஒன்பது ஊராட்சிகளிடம் மக்கள்  தொகை விபரம் மற்றும் வரவு செலவுகள் குறித்து விளக்கம்  கேட்டப்பட்டது.  உடுமலை நகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டின் மக்கள்  தொகை கணக்கெடுப்பின்  61150 மக்களுக்கு 33 வார்டுகள்  எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. நகரின் எதிர்கால  வளர்ச்சியை கவனத்தில் கொள்ளும் வகையில் எல்லைகளில்  உள்ள 13 ஊராட்சிகளான கணக்கம்பாளையம், பெரிய கோட்டை, போடிபட்டி, குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, கண் ணம்மநாயக்கனூர், ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணறு, குரல்குட்டை, புக்குளம், கோட்டமங்கலம் மற்றும் பொன்னேரி ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க  வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும்  நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக் குநர் சென்னை  ஆகியோருக்கு கருத்துரு அனுப்பும் வகை யில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரியவருகிறது.

பழுதான சாலைகளால் போக்குவரத்து நெரிசல்

உடுமலை, ஜன.11- உடுமலை நகரில் குண்டும் குழியுமான சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்ற னர். இதைத் தடுக்கும் வகையில் சாலைகளை  சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக உடுமலை நக ரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு கிராம  புற மக்கள் அதிக அளவில் வரும்  நிலையில்,  வணிக வளாகம் உள்ள மத்திய பேருந்து நிலையம், வஉசி வீதி, தளி சாலை, பொள் ளாச்சி சாலைகளில்  கூட்டம் அதிகமாக இருக் கும் சாலைகள் குண்டும் குழியுமாக  உள்ளதால் பொது போக்குவரத்துகள் செல்ல  முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுகிறது. இந்நிலையில் போக்குவரத்துகளைச் சரி  செய்யும் வகையில் குட்டை திடலில் வாகனங் களை நிறுத்த காவல்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் பழு தடைந்த சாலைகளை சரி செய்யும்  வகையில் பேஜ் ஒர்க் செய்ய வேண்டும். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், பொங் கலுக்கு தேவையான பொருட்களை வாங்க  கடைகளுக்கு செல்ல முடியாத நிலையில் அனைத்து சாலைகளும் பழுதுதடைந்து  உள்ளது. நான்கு சக்கர வாகனங்களை பொது வான இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். பாதாள சாக்கடை குழிகளை மூட  வேண்டும். இரவு நேரங்களில் மக்கள் கூடும்  வீதிகளில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க  வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு

அவிநாசி,ஜன.11- அவிநாசி அருகே  இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவிலில் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அனு மதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து,  துணை வட்டாட்சியர் தலை மையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையை துறைக்கு உட்பட்ட மாரியம்மன் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தாழ்த் தப்பட்ட அருந்ததியின மக்கள் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினர் தடை செய்து வைத்தி ருந்ததாகவும், ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக விசிக அறிவித்திருந்தது. இதனையடுத்து, திருப்பூர் வடக்கு வட்டாட் சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு  கோவில் வளாகத் தில் அனைத்து தரப்பினரும் சமத்துவ பொங் கல் வைத்து வழிபாடு நடத்த முடிவு  செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து  துணை வட்டாட்சியர் பரமேஸ் மேற்பார்வை யில் காவல்துறை பாதுகாப்புடன் அருந்த தியர் வகுப்புமக்கள், கோவில் வளாகத் தில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்த னர். 30 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப் பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டு  இருப்பதாகவும்,  இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்படும் கோவில் நிர் வாக குழுக்களில் அனைத்து சமூக மக்களை யும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்  என விசிகவினர் கோரிக்கை வைத்துள்ள னர்.

திருப்பூர் ஐஸ்கிரீம் கடையில் குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு

திருப்பூர், ஜன.11 - திருப்பூர் ஐஸ்கிரீம் கடையில் வேலைக்கு  அமர்த்தப்பட்டு இருந்த இரு சிறார்களை குழந்தைகள் உதவி மையத்தினர் மீட்டனர். திருப்பூர் புஷ்பா தியேட்டர் பகுதியில்  செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிவதாக  திருப்பூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு  தொலைபேசி வாயிலாக புதனன்று புகார் வந்தது.  இதன் அடிப்படையில் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது  பாஷா அறிவுறுத்தலின்படி புதன் மாலை  குழந்தைகள் உதவி மைய  பணியாளர் வரத ராஜ், தொழிலாளர் உதவி ஆய்வாளர் நவ நீதன் ஆகியோர் இணைந்து ஐஸ்கிரீம் கடை யில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 15  வயது மற்றும் 17 வயது பூர்த்தி அடையாத இரு  சிறார்கள் ஐஸ்கிரீம் கடையில் வேலை  செய்து வந்தது கண்டறியப்பட்டது. இருவரை யும் மீட்ட அலுவலர்கள்,  திருப்பூர் 15 வேலம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டிஸ்ஸோ குழந்தைகள் பராமரிப்பு இல்லத் தில் ஒப்படைத்தனர். வியாழனன்று இரு சிறுவர்களையும், பெற்றோர்களுடன் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்ப்படுத்தினர். இவர்களிடம்  விசாரணை நடத்திய குழந்தைகள் நலக்குழு,  சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை  கூறி சிறுவர்களை பெற்றோர் வசம் ஒப்படைத் தனர். மேலும் குழந்தைகளை பணிக்க மர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர் மீது  தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலம் சட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. திருப்பூர் குழந்தைகள் உதவி  மைய ஒருங்கிணைப்பாளர் சு.கதிர்வேல்  இத்தகவலை தெரிவித்துள்ளார்.

பொங்கலை வரவேற்க மார்கழியில் ‘சலகெருது’ ஆட்டம்

பொங்கல் பண்டிகையை வரவேற் கும் வகையில் ஊர் பொது இடத்தில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்து  பொது மக்கள் மாடுகளுடன் சலங்கை கள் கட்டி ஆடுவார்கள். ஒரு கிரா மத்தின் வளம், கால்நடைகளின் வளத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படு கிறது. கால்நடைகளுக்கு நன்றி தெரி விக்கும் வகையிலும், பாரம்பரிய கலை யைப் பாதுகாக்கும் வகையில் சலகெ ருது ஆட்டம் நடத்தப்படுகிறது. மேலும், பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெ டுக்கும் காளைக் கன்றுகள் ஊருக்கு சொந்தம் என கருதப்படுகிறது. இந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகிறது. இந்த கன்றுகளை கிராம மக்கள் சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர். சலகெருது எனப் பெயரிட்ட கால் நடைகளுக்கு மூக்கணாங்கயிறு அணி விக்கப்படுவது இல்லை. இந்த எருது கள் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும். மார்கழி மாத இரவுகளில், ஊர்  பொது இடத்தில், இசைக்கு தகுந்தாற் போல் ஆடி செல்ல, உறுமி இசை  கலைஞர் தலைமையில் பயிற்றுவிக்கப் படும். மார்கழி மாதம் முழுவதும், தங்கள் கிராமங்களில் சலகெருது ஆட் டத்தை ஆடும் மக்கள், தை பிறந்த தும், சிறப்பு பொங்கலை எருதுக்காக வைத்து வழிபடுவர். பின்னர், கால்ந டைகளின் தெய்வமாக கருதப்படும் கோவில்களுக்கு அவை அழைத்து செல்லப்படுகின்றன. உடுமலை சுற்று வட்டார கிராமங்களிலிருந்து, அனைத்து சலகெருதுகளும் வரவழைக்கப்பட்டு, பொங்கல் திருவிழா முடிந்ததும், நாட் டுப்புற பாடல்கள் பாடப்பட்டு சலகெ ருது பால் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இனிவரும் நாட்களில், கொங் கலக்குறிச்சி, ஆலாம்பளையம், குறிச் சிக்கோட்டை, குறிஞ்சேரி, கொங்கல் நகரம், லிங்கம்மாவூர், அம்மாபட்டி, பெரியகோட்டை, வெனசப்பட்டி, ராஜா வூர் என பல்வேறு கிராமங்களில் இந்த  பாரம்பரிய ஆட்டம் நடத்தப்பட உள் ளது. காணும் பொங்கலையொட்டி, ஒவ் வொரு கோவிலுக்கும் சலகெருது அழைத்துச் செல்லப்பட இருப்பதால், அதற்கான ஆயத்துப்பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

மரக்கிளை விழுந்து ஒருவர் காயம்

உதகை, ஜன.11- பந்தலூர் அருகே மரக்கிளை விழுந்து வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் காயமடைந்தார். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே கூலால் பகு தியை சேர்ந்தவர் லட்சிய தீபன்(35). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது  மகளுக்கு  வியாழனன்று பிறந்தநாள் விழா கொண்டாட உள்ள நிலையில், புதனன்று வீட்டின் அருகே காய்ந்த நிலை யில் இருந்த சிறிய மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட் டுள்ளார். அப்போது, மரத்தின் கிளை முறிந்து அவரின் மீது  விழுந்துள்ளது. இதில் காயமடைந்த லட்சிய தீபனை அருகில்  உள்ளவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர், இதுகுறித்து, எருமாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

கோவை, ஜன.11- வடகோவை ரயில் நிலையத்தில் ’அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தெற்கு  ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.  தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய நான்கு ரயில்வே கோட்டங்களில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் கோட்டத் துக்குட்பட்ட வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்க ளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்ட றிந்தார். மேலும், விரைவில் பணிகளை முடிக்க அறிவு றுத்தினார். ஆய்வின்போது, சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் பங்கஜ் குமார் சின்ஹா, கூடுதல் மேலாளர் பி.சிவ லிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில்  ஆசிரியர் பணிக்கு வாய்ப்பு

 ஈரோடு, ஜன. 11- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும்  செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை  பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளியில், காலியாக இருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், துணை விடுதிக்காப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணி யிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் மதிப்பூதிய முறையில் தற்காலிகமானதும், நிபந்தனையின் அடிப்படையிலானதுமாகும். முதுகலை பாட ஆசிரியருக்கு ரூ.18ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15ஆயிரம், துணை  விடுதிக்காப்பாளருக்கு ரூ.12ஆயிரம் வீதம் ஊதியம் வழங்கப்படும். உரிய கல்வித்தகுதிகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி  வாய்ந்தவர்கள் இருப்பின் டெட் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும், டெட் தேர்ச்சி பெறாத மாற்றுத்திற னாளிகள், டெட் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனற்ற சாதாரண  நபர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இப்பணியிடங் களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை யெனில், பள்ளிக் கல்வித்துறையின் வாயிலாக நடத்தப்ப டும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி  வாய்ந்த தன்னாவலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  எனவே, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க விரும்புகிறவர்கள் தாங்கள் எழுத்து மூலமாக  விண்ணப்பித்தினை உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் ஜன. 22ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.என்.புதூர், ஈரோடு-5 என்ற முகவரியில் நேரிலோ அல்லது  தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மதுவுக்கு அடிமையான கணவன்: மனைவி தற்கொலை

உதகை, ஜன.11- கணவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையா னதால், விரக்தியடைந்த மனைவி தற் கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச் சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள் ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த அரு வங்காடு ஒசட்டியைச் சேர்ந்தவர் ஆரோக் கியநாதன். இவருடைய மனைவி கிரி சினா(36). இவர்கள் அந்த பகுதியில் கட்டிட  தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்ற னர். ஆரோக்கியநாதனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், தம்பதியினரிடையே, அவ்வப் போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப் படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று தம்பதியினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கிரிசினா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அவர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி  அடைந்த அக்கம் பக்கத்தினர், கிரிசினாவை மீட்டு குன்னூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதித்தனர். இதைத்தொ டர்ந்து மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, கிரிசினாவுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொஞ்சம் உடல்நிலை தேறியவுடன் வீட்டுக்கு வர கிரிசினா முடிவு செய்ததாக தெரிகிறது. இதனி டையே, வீட்டுக்கு வரும் வழியில் மீண்டும் உடல் நிலை மோசமானதால் அவரை குன் னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், கிரிசினா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து, அரு வங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லால் தாக்கிய வாலிபர் கைது

சூலூர், ஜன.11:  சூலூர், காங்கேயம்பாளையம் பகு தியைச் சேர்ந்த நபரை, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீ சார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம், சூலூர் அருகே காங்கேயம் பாளையம் விக்னேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (20).  இவர் செவ்வாயன்று, காடாம்பாடி பகுதி யில் உள்ள தனது நண்பர்களுக்கு கோவில் பிரசாதம் கொடுக்க சென்றுள்ளார். அப் போது குணசேகரனை காடாம்பாடி பி.என்.பி நகரைச் சேர்ந்த விக்னேஷ்(21) என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஏற்கனவே, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ள நிலையில் தடுத்து நிறுத் திய விக்னேஷ், குணசேகரனிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாற, இரு வரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது, அங்கே கிடந்த கல்லை எடுத்து குணசேகரன் முகத்தில் விக்னேஷ் பல மாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதில் குணசேகரனுக்கு மூன்று பற்கள்  உடைந்துள்ளது.  இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குணசேகரன் கோவை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சூலூர் போலீ சார், விக்னேஷை கைது செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

திறக்கப்படாத நவீன கழிப்பிடம்

வால்பாறை, ஜன.11- கருமலை எஸ்டேட் பகுதியில், கட்டப்பட்டு பல நாட்க ளாக பயன்பாட்டுக்கு வராத நவீன கழிப்பிடத்தை உடனடி யாக திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு உட்பட்டது கருமலை எஸ்டேட் பகுதி. இங்குள்ள, பஜார்  பகுதியில் நகராட்சி நவீன பொது கழிப்பிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், இதுவரை கழிப் பிடம் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வரு கின்றனர். மேலும், திறந்தவெளியை பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் உட னடியாக நவீன கழிப்பிடத்தை திறந்து, மக்களின் பயன் பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை – தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்

கோவை, ஜன.11- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவையி லிருந்து தாம்பரத்துக்கு  ஜன.16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06086)  இயக்கப்படவுள்ளது. கோவை யிலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுவழித்தடத்தில் தாம்ப ரத்தில் இருந்து கோவைக்கு  ஜன.17 மற்றும் 18 ஆம்  தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06085) மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு  நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு

உதகை, ஜன.11- சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், எளிய மக்களுக்கு சட்டத்தின் தேவைகள் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை  வழங்கி நீலகிரி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. உதகையில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவின் பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் மேற் பார்வையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து நீல கிரிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்ப டுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி உதகை அரசு தாவர வியல் பூங்கா, சூட்டிங்மட்டம், 9ஆவது மைல் உள்ளிட்ட பகுதி களில் சுற்றுலா பயணிகளுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பணியில் வழக்கறி ஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் கூறுகையில், வழக்கறிஞர்கள் வைத்து  வழக்கு நடத்த முடியாத ஏழை எளிய மக்களுக்கு சட்ட  உதவிகள் வழங்கிட சட்டப்பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டது. மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து அவற்றின் தகுதியை தீர்மானிப்பது, சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்தி கிராம மற்றும் பாமர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாகும். தாழ்த்தப்பட்டோர், பட்டியல் பழங்குடியினர், அரசியல மைப்பு சட்டப்பிரிவு 23இல் குறிப்பிட்ட மனிதர்களை விற்பதும், வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவதால் பாதிக்கப் பட்ட நபர், பிச்சை எடுப்பவர், பெண் அல்லது குழந்தை, ஊன முற்றோர், பேரழிவு, இன வன்முறை, சாதி வன்கொடுமை, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகா மல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் சட்ட உதவிகள் பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட, வட்ட அளவில் நீதிமன்ற வளாகங்களில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை அணுகலாம்.  இங்கு கர்நாடகா கேரள மாநில சுற்றுலா ப்பயணிகள் அதிக  அளவில் வருவதால் அந்தந்த மாநில மொழிகளிலும்  இதற்கு பின்னர் நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினர்.

வனவிலங்கு குறித்து வதந்தி கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

உதகை, ஜன.11- வனவிலங்குகளை பற்றி பொய்யான செய்தி பரப்பு வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதி களில் வனத்துறையினர் சிறுத்தையை இரண்டு நாட்களுக்கு முன்பு பிடித்து விட்டபோதிலும், மீண்டும் ஒரு சிறுத்தை இருப் பதாகவும் வனப்பகுதிக்குள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள்  சுற்றி வருவதாகவும் பொய்யான தகவல்களை சமூக வலை தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பொது மக்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.  இந்நிலை யில் கூடலூர் பகுதியில் வசித்து வரும் சஜார் என்பவர் தனது  இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேவையில்லா மல் பொதுமக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வீடியோக் களை பதிவிட வேண்டாம் என்றும் ஒரு பதிவினை பதிவிடும் முன் அதன் உண்மை தன்மையை அறிந்து அதன் பின்னரே பதிவிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி யுள்ளார். இவரது செயலை பாராட்டி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுந்தரவடிவேல் வியாழனன்று பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார் மேலும் வனவிலங்குகள் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி அவர்கள் மீது கடுமை யான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு

தருமபுரி, ஜன.11- பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலையின் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ்  தருமபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரியில் அண்ணாமலையின் நடைப யணத்தின்போது, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள செயின்ட் லோர்டெஸ் தேவாலயத் தில் உள்ள மேரி மாதா சிலைக்கு மாலை அணி விக்க முயன்றார். இதனைக்கண்ட சில இளை ஞர்கள், மணிப்பூரில் நடக்கும் வன்முறைக ளுக்கு பதில் சொல்ல வேண்டும் என எதிர்ப்பு  தெரிவித்தனர். அப்போது, அண்ணாமலை  அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, “உங்களுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது? இப்போதே நான் 10 ஆயி ரம் பேருடன் தர்ணாவில் ஈடுபட்டால் என்ன  செய்வீர்கள்” என மிரட்டிய கானொலி வைர லாக பரவியது. அமைதியாக சமூக நல்லிணக் கத்துடன் மக்கள் வாழும் பகுதியில் திட்ட மிட்டே வகுப்புவாத நடவடிக்கைகளை தூண் டும் வேலையை அண்ணாமலை திட்டமிட்டு செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தற்போது தருமபுரி மாவட் டத்தில் சம்பந்தமே இல்லாமல் தேவலயத் திற்குள் பிரச்சனையை உருவாக்கும் நோக் கத்துடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி யது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாப் பிரெட்டி பட்டியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் 153 (A), 504 மற்றும் 505 (2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடன் வழங்க முடியாது என சொல்ல 3 ஆண்டுகளா?
தனியார் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் நீதிமன்றம் அபராதம்

நாமக்கல், ஜன.11- கடன் வழங்க முடியாது என மூன்று  ஆண்டுகள் கழித்து வாடிக்கையாள ரிடம் தெரிவித்த தனியார் வங்கிக்கு ரூ.25  ஆயிரம் இழப்பீடு செலுத்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், வேல கவுண் டன்பட்டி அருகே உள்ள கொத்தூரில் வசிப்பவர் முருகேசன் (46).  இவர்  மைசூரில் உள்ள தனியார் நிறுவனத் தில் பணியற்றிவந்தார். 2019-ஆம்  ஆண்டில் மைசூரில் உள்ள ஐசிஐசிஐ    ஹோம் பைனான்ஸ் கிளை மேலாளரை  அணுகி வீடு கட்ட இடம் வாங்குவதற்கு கடன் விண்ணப்பித்துள்ளார். கடன்  வழங்குவதாக கூறிய வங்கி நிர்வாகம்  பிராசசிங் கட்டணம் ரூ.3,540 செலுத்து மாறு நிறுவன மேலாளர் தெரிவித்துள் ளார். மேலும், அனைத்து ஆவணங்க ளையும் சமர்ப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலமுறை கடன் கேட்டு அலைந்தும், தாமதம் செய்து வந்துள்ள னர். மீண்டும் முருகேசன் மேலாளரை சந்தித்து கடன் வழங்குமாறு கேட்ட போது, புதிய விதிமுறைகளின் படி கடன்  வழங்க இயலாது என தெரிவித்துள் ளார். இதன் பிறகு கடன் கேட்டு செய்த  விண்ணப்பத்தின் நிலையை தெரிவிக்கு மாறு கடிதம் எழுதியும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் எவ்வித பதிலை யும் தரவில்லை. பதில் வராததால் தமக்கு கடன் தரவில்லை என்றால்,  செலுத்திய பிராசசிங் கட்டணத்தையும்,  ஆவணங்களையும் கேட்டு முருகேசன் கடிதம் அனுப்பி உள்ளார்.  இதற்கு சுமார் மூன்று ஆண்டுகள்  கழித்து, கடன் கேட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது சேவை குறை பாடு என்று கடன் கேட்டவர் நாமக்கல்  மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் புத னன்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். ஒருவருக்கு கடன் வழங்குவதும் வழங் காததும் நிறுவனத்தின் விருப்பம் என்ப தால், கடன் வழங்காததை சேவை குறை பாடு என கூற முடியாது. ஆனால், கடன்  விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகள்  கழித்து கடன் வழங்க இயலாது என்று  நிறுவனம் கூறுவது   சேவை குறைபாடு  என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இத னால் முருகேசன் செலுத்திய சேவை கட்டணத்தில் ரூ.2 ஆயிரத்தையும், சேவை குறைபாட்டிற்கான இழப்பீ டாக ரூ.25 ஆயிரத்தையும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல்  செய்தவருக்கு நான்கு வாரங்களுக் குள் வழங்க வேண்டும் என்று நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.22 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஜன.11- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில்  இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 34,632 கிலோ  பருத்தியை விவசாயிகள்  கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகம் கிலோ ரூ. 60 முதல் ரூ.72  வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண் டால் கிலோ ரூ. 20முதல் ரூ.30 வரையிலும் ஏலம் போனது. மொத்தம். ரூ.22 லட்சத்து 30 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.