districts

காய்கறி கமிஷன் ஏஜண்டுகள் மீது கிரிமனல் நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் கோரிக்கை

உடுமலை, நவ.23- பொது மக்களுக்கு தீங்கு ஏற்ப டும் வகையில் முழு அறுவடை காலம்  முடியும் முன்பே காய்களை அறு வடை செய்ய கூறும் காய்கறி கமிசன்  ஏஜண்ட்கள் மீது கிரிமனல் வழக்கு  பதிய விவசாய சங்கம் வலியுறுத்தி யுள்ளது. உடுமலை கோட்டாட்சியர் அலுவ லகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த்  கண்ணன் தலைமையில் விவசா யிகள் குறைதீர்ப்பு கூட்டம் புதன்கி ழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் உடுமலை மத்திய பேருத்து நிலையம் அருகில்  உள்ள சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் விவசாயிகளை வஞ் சிக்கும் வகையில் நியாயம் இல்லாத  வகையில் விவசாய விளை பொருள் களுக்கு விலை நிர்ணயம் செய்கி றார்கள். அதே போல்  பொது மக்க ளுக்கு தீங்கு ஏற்படும் வகையில் காய் களை முழு அறுவடை காலம் முடியும்  முன்பே அறுவடை செய்ய கமிசன்  கடையினர் கூறுவதால் விவசாயி களும் பிஞ்சு தன்மையான காய் களை விற்பணைக்கு கொண்டு வரு கிறார்கள். இதனால் இப்பொருள்கள்  நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும் ஆனால் இதனை பயன்ப டுத்தும் பொதுமக்களுக்கு தீங்கு ஏற் படும். எனவே வேளாண்துறை மற் றும் சுகாதாரதுறை அதிகாரிகள் கமி ஷன் கடைகளில் ஆய்வு மேற் கொள்ள வேண்டும். உடுமலை கொல்லம்பட்டரை அருகில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாய விளை பொருள் களை விற்பனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் குடிமங்கலம் பகுதியில் உள்ள  நீர் நிலை ஓடைகளில் முறையான அளவீடுகள் இல்லாமல் கட்டப்பட்ட  செக் டேம்களால் விவசாய விளை நிலங்களுக்குள் தண்ணீர் செல்வ தால் காய்கறி பயிர்களுக்கு கடுமை யான பாதிப்பு ஏற்பட்டுவுள்ளது.  திட்டமிடாமல் செக்டேம் கட்டிய அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் பாதிக்கபட்ட  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேளாண்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். 

தேசிய நெடுச்சாலைகளுக்கு மண் எடுத்துகொண்டு செல்லும் லாரி களால் அனைத்து சாலைகளும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி பகுதியில் கடந்த வாரம் காட்டுபன்றி தாக்கி காயம் அடைந்த விவசாயிக்கு வனத் துறை சார்பில் நிவாரணம் கிடைக் கவும், வனபகுதியில் இருந்து பல  கிலோ மீட்டர் தூரம் உள்ள குடி மங்கலம் பகுதிகளுக்கு காட்டு பன்றிகள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக் கப்பட்டது.  பல வருடங்கள் கிடப்பில் போடப் பட்ட ஆண்டியகவுண்டனூர் ஊராட் சியில் உள்ள ஜம்புகல் மலை பகுதி யில் தனிநபர் ஆக்கிரப்பால் அந்தப குதியில் உள்ள இயற்கை வளங் கள் மற்றும் நீர் வழிதடங்கள் அனைத் தும் அழிக்கபட்டுவதை தடுத்த விவ சாயிகளின் மீது வழக்குகள் போடப் பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது வரை அரசு நிலத்தை ஆக்கிரப்பு செய்த தனி நபர் மீது எவ்வித நட வடிக்கையும் இல்லை. அரசு சொத்து கள் சூறையாடப்பட்டது குறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும். அதே  பகுதியில் அமராவதி ஆற்றின் அரு கில் இருந்து எவியாஜென் என்ற  தனியார் நிறுவனம் முறைகேடாக  குழாய் அமைத்து தண்ணீர்  எடுத்து வருவதை தடுக்க வேண் டும்.

கூட்டுறவு சங்கத்தில் அடமா னத்தின் கடன் பெற்ற விவசாயிகள் கடனை திருப்பி செலுத்திய பிற கும் அசல் பத்திரங்களை பல மாதங் களாக திருப்பி தர மறுக்கும் கூட்டு றவு சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங் கத்தின் செயலாளர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கூட் டத்தை கோட்டாட்சியர் கூட்ட வேண் டும் என்றார்கள்.  அதே போல் தேசியமய வங்கிக ளில் விவசாய கடன் தருவது இல்லை.  மேலும் அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு தரும் விவசாயிக ளுக்கு கடந்த வருடம் மானியமாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசா யிகளிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை தனியார் நிறுவனம்  வாங்கி ஒரு வருடம் ஆன நிலையில் தற்பொழுது வரை சொட்டு நீர்ப்பாசனம் அமைக்காத நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளுக்கு மானி யம் மற்றும் ஆலை பரமாரிப்புக்கு என 12 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், ஊழியர் பற் றாக்குறையின் காரணமாக முறை யாக நிதியை பயன்படுத்த முடியாத  நிலை உள்ளது. எனவே சர்க்கரை ஆலைக்கு போதிய ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உடுமலை வட் டாட்சியர் கண்ணாமணி, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர் . மதுசூதனன், மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டமாணி, பரமசிவம், ராஜ கோபால் மற்றும் பாசன சங்க தலை வர் சின்னு, குடிமங்கலம் கனகராஜ்,  ஜல்லிபட்டி கோபால் , இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் செளந்தர்ராஜ் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டார்கள்.