திருப்பூர், ஜூலை 12- சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றாவிட்டால் தொடர் போராட் டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆனந்தா அவென்யூ பகுதியில் தட்டி வைத்துள் ளனர். திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்துக்குட்பட்ட 25ஆவது வார் டில் உள்ள ஆனந்தா அவென்யூ, ஆனந்தா என்கிளேவ் பகுதியிலிருந்து தினசரி வெளிவரும் கழிவுநீரை அகற் றிட வலியுறுத்தி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பலமுறை மனு அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சாலையின் குறுக்கே குழாய் அமைத்து, கணியாம்பூண்டி செல்லும் மண் சாலை யின் ஓரத்தில் கால்வாய் வெட்டி சாக் கடை நீரை வெளியேற்றி வந்தனர். அரு கிலுள்ள சிலர் அந்த கால்வாயையும் மண்ணை கொட்டி அடைத்து விட்டனர். இதனால், சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கிநின்று, மண்சாலை கடு மையாக சேதமடைந்துள்ளது. இச்சா லையை பணிக்குச் செல்லும் பொது மக்கள், பள்ளிச் செல்லும் குழந்தைகள் என ஏராளமானோர் பயன்படுத்தி வரு கின்றனர். மேலும் சாலையோரத்தில் அமைக்கப்ட்டுள்ள மின்மாற்றி ஒன்றும், மின்கம்பம் ஒன்றும் மண் அரிப்பின் கார ணமாக சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து, கடந்த 7ஆம் தேதி இப்பிரச்சனை குறித்து மாநகராட்சி மேயர் மற்றும் மண்டல உதவி ஆணை யர் ஆகியோருக்கு இணைய வழியி லும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், 15.வேலம்பாளையம் நகரக்குழு புகார் மனுவாக நேரிலும் அளித்தனர். உதவி ஆணையரும் நேரில் பார்வை யிட்டு, உடனடியாக கழிவுநீரை அகற் றும் பணியை செய்வதாக தெரிவித்தார். ஆனால் 3 நாட்களாகியும் கழிவுநீரை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று சாலையின் ஓரத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தட்டி வைத்துள்ளனர்.