திருப்பூர், அக். 22 – அக்னிபாத் திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகா மிற்கு திருப்பூர் மாவட்டத்தின் நகர்ப்புற உள் ளாட்சிகளிடம் பெறப்பட்ட ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, ஒன்றிய அரசு சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடி யாக திரும்ப வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் கடந்த 19ஆம் தேதி புதன்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டைப் பாதுகாக்கும் உயர்ந்த பணியைச் செய்யும் ராணுவத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்க் கும் அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு தரப் பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந் தியாவில் பல கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நி லையில், நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்திலேயே அத்தக்கூலிகளைச் சேர்ப்பது கண்டனத் துக்குரியது. இத்தகைய ஆட்சேபத்துக்குரிய திட் டத்தை அவசரகதியில் நிறைவேற்றத் துடிக் கும் ஒன்றிய அரசு, அதற்குரிய நிதி ஒதுக் கீட்டைக்கூட தேசப் பாதுகாப்புக்கான நிதி யில் இருந்து செலவிடாமல், நகர்ப்புற உள் ளாட்சிகளின் நிதியை ஒதுக்குவதற்கு அறிவு றுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி யில் நடத்தப்பட்ட அக்னிபாத் ஆள் சேர்ப்பு முகாமிற்கான செலவுக்கு, திருப்பூர் மாநக ராட்சி ரூ.12 லட்சம், ஆறு நகராட்சிகள் தலா ரூ.3 லட்சம் வீதமும், 15 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சிகள் தலா ரூ. 50 ஆயிரம் வீதமும், 4 பேரூராட்சிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதமும் நிதி வழங்கியுள்ளன. ஏற்கெனவே மாநில அரசுக்கும், உள் ளாட்சி அமைப்புகளுக்கும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டைக்கூட முழுமையாக வழங்காமல் பாரபட்சம் காட்டு வதுடன், மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியில் லாமல் சிக்கித் தவிக்கும் உள்ளாட்சிகளிடம் இருந்தே ரூ.36 லட்சத்து 50 ஆயிரத்தை ஒன் றிய அரசு நிர்பந்தம் செய்து பெற்றிருப்பது, “குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழி யும் பறித்தது” என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது. எனவே எந்த அடிப்படை நியாயமும் இல் லாமல் அக்னிபாத் திட்டத்துக்கு நகர்ப்புற உள்ளாட்சி நிதியை செலவிட்டதை ஏற்க முடி யாது. திருப்பூர் நகர்ப்புற உள்ளாட்சிகளிடம் வசூலித்த அந்த தொகையை உடனடியாக ஒனறிய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
மலை மக்களுக்கு சாலை வசதி
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வட்டம் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட குரும லைக்கு, திருமூர்த்திமலை தார் சாலை முதல் குருமலை வரை தார் சாலை அமைக்க, வன உரிமைச் சட்டம் 2006இன்கீழ் வன உரிமைக் குழுவிலும், தளி பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அமைச்சரும் சாலை அமைக்க பரிந்துரைத்துள்ளார். இந்த சாலை இல்லாததால் கர்ப்பிணிகள், முதியோர், உடல் நலம் பாதிக்கப்படுவோர் அவசர மருத் துவ சிகிச்சைக்கு கூட பல கிலோமீட்டர் தொட் டிலில் சுமந்து வர வேண்டிய அவல நிலை உள் ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் வனத்துறையும், வருவாய்த்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பூர் மகாவிஷ்ணு நகரைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன் என்பவர், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கிய நிலையில், கடுமையான வட்டி விதித்து கூடு தல் தொகை கட்ட வேண்டும் என நிர்பந்திக்கப் பட்டதால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரம் தற்கொலை செய்து கொண்டார். தற் போது பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம், ராஜேஸ்கண்ணன் மனைவியிடம் கடன் பணத்தை வசூலிக்க முயற்சி செய்து வருகி றது. குடும்பத் தலைவரின் உயிரையும் பறித்து, அந்த குடும்பத்தாரிடம் மீண்டும் பணம் வசூலிக்க முயற்சிக்கும் பஜாஜ் நிறுவ னத்தின் செயல் இரக்கமற்றது, வன்மை யாக கண்டிக்கத்தக்கது. எனவே பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்புடைய அலுவலர்கள் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத் தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், பெருமாநல்லூரில் வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போ னுக்கு கடன் தருவதாக கூறியுள்ளது. ஆன் லைனில் செல்போன் வாங்க ஆர்டர் செய் ததை, ரத்து செய்த பிறகும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.34 ஆயிரத்தை பஜாஜ் நிறுவனம் எடுத்துக் கொண்டது. அத்து டன் இன்னும் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண் டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இது போல் ஏராளமானோர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் பிரச்ச னையில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமை யான கண்காணித்து, ரிசர்வ் வங்கியின் விதிமு றைப்படி செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிறுவனத்தின் கடன் வலை யில் பல ஆயிரக்கணக்கான ஏழை, அப்பாவி மக்கள் சிக்கி பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்திருப்பதாக, மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.