திருப்பூர், ஜன. 7- 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்க ளுக்கு பல வாரங்களாக சம்பள நிலுவை வைத்துக்கொண்டு பண்டிகை காலத்தில் மட் டும் சம்பளம் தருவதா என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அந்த தொழிலாளர்களுக்கு முழுமையான சம்ப ளம் வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட் டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) வேலை செய்யும் பல்லாயி ரம் தொழிலாளர்களுக்கு கடந்த 8, 9 வாரங்க ளாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. ஏற்க னவே வறிய நிலையில் வாடும் கிராமப்புற தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழி லாளர்கள் ஊதியம் கிடைக்காமல் மிகவும் சிர மப்படுகின்றனர். ஒன்றிய அரசு இத்திட்டத்தை சீர்குலைக் கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீட்டை வெட்டி சுருக்கி வருகிறது. அத் துடன் ஒதுக்கப்பட்ட நிதியையும் முறையாக விடுவிக்காமல் காலதாமதம் செய்கிறது. இத னால் கிராமப்புறங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதிய பாக்கி நிலுவையில் உள்ளது. ஏற்க னவே பாக்கி இருந்த நிலையில் பல்வேறு பகு திகளிலும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். அதன் பிறகு தீபா வளி பண்டிகைக்கு முன்னதாக அவர்களது நிலுவைச் சம்பளம் விடுவிக்கப்பட்டது. எனினும் அதன் பிறகு தற்போது வரை 8, 9 வாரங்களாக அந்த தொழிலாளர்களுக்கு சம் பளம் வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலா ளர்கள் சம்பளம் வழங்காதது பற்றி புகார் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் பொங் கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் ஒரு சில பகுதிகளில் இந்த தொழிலாளர்களுக்கு ஒரு வார சம்பளம் மட்டும் வழங்கப்பட்டுள் ளது. பாக்கி 7, 8 வார சம்பளம் நிலுவை யில் நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை தொழிலாளர்களுக்கு இதுபோல் முறையாக சம்பளம் தராமல் பண் டிகைக்கு பண்டிகை மட்டும் சம்பளம் தரும் நிலை என்பது அவர்களை வஞ்சிக்கும் மிகப் பெரிய அநீதி ஆகும். எனவே ஒன்றிய அரசு 100 நாள் திட்டத் திற்கான சம்பளத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அனைத்து தொழிலா ளர்களுக்கும் முழுமையான நிலுவைச் சம்ப ளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்ன தாக திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதி களிலும் அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக மிகப்பெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.