districts

img

மின் வேலியில் சிக்கிய பழங்குடியினத்தவர் வெளியே சொல்லக்கூடாது என கடும் தாக்குதல்

தருமபுரி, டிச.15- விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில்  சிக்கி பாதிக்கப்பட்டவர் மீது தாக்கு தல் நடத்திவர்கள்  மீது வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்ய சிபிஎம், மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத் திற்குட்பட்ட செம்மன அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய சென்னப்பனின் மகன் சென் னப்பன் (35). இருளர் சமூகத்தை சேர்நதவர். இவரது மனைவி முனியம்மாள் (30) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்த தம்ப திக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும், 2 வய தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் களது விளை நிலத்தில் விவசாயம் செய்து  வருகிறார்கள். இந்நிலையில், சென்னப்பன் டிசம்பர் 11 ஆம் தேதியன்று மாலை 7 மணிய ளவில் தனது மாட்டை பிடித்து வர பொதுப் பாதையில் சென்றுள்ளார். இந்த பொதுப்  பாதையையொட்டி கோவிந்தராஜ் என்பவரது  விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் வன விலங்குகள் உள்ளே நுழைவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக சென் னப்பன் மீது மின்சாரம் பாய்ந்து நிலைதடு மாறி விழுந்தார். இதை பார்த்த நிலத்தின் உரி மையாளர் கோவிந்தராஜ் (எ) வக்கீல், விழுந்து கிடந்த  சென்னப்பனை தனது மாட்டு கொட்டகைக்கு அழைத்து சென்றார். அங்கு கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினரான பாவளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், சீரம் பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, மின்சாரம் பாய்ந்ததை வெளியில் சொல்லகூடாது என கூறி சென்னப்பனை கடு மையாக அடித்துள்ளனர். பின்னர் சென்னப் பனை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு  சென்றுள்ளனர். கோவிந்தராஜும் அவரது  உறவினர் தாக்கியதில் சென்னப்பனின் கழுத்து எழும்பு, முதுகெலும்பு தண்டுவடம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுள்ளது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் பெல் ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதுகுறித்து சென்னைப்பனின் தந்தை பெரிய சென்னப்பன் கூறுகையில், நாங்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்கள்  நிலத்தில் நானும், என் மகனும் விவசாயம் செய்து வருகிறோம். எங்களின் நிலம் அருகே  கோவிந்தராஜின் நிலம் உள்ளது. பொதுப் பாதையில் அருகே மின்வேலி அமைத்துள்ள னர். மின்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் 10  மாடுகள் சிக்கி இறந்துள்ளது. எனது மகனும் மின் வேலியில் சிக்கிகொண்டார். இதை யாரி டம் சொல்லகூடாது என அடித்துள்ளனர். கோவிந்தராஜால் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சென்னப்பனை, தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கோடு வட்ட செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகி யோர் நேரில் பார்வையிட்டு நடந்த சம்ப வத்தை கேட்டறிந்தனர். மாற்று சமூகத்தை சேர்ந்த கோவிந்தராஜ் பொதுப்பாதையில் அருகில் உள்ள அவரது நிலத்தில் மின்வேலி அமைத்துள்ளார். இப்பாதையில் நடந்து சென்ற போது சென்னப்பன் மின்வேலியில் சிக்கி பாதிப்படைந்துள்ளார். மின்சாரம் தாக்கி பாதிப்படைந்து விழுந்த கிடந்த சென் னப்பனை இழுத்து சென்று வெளியில் சொல் லக்கூடாது என கடுமையாக அடித்துள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்தவர் சென்னப்பன்  என்பதால் கோவிந்தராஜ் தாக்கியுள்ளார். எனவே. கோவிந்தராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட் டத்தின் கைது செய்ய வேண்டுமென மாவட்ட காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தை யும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.