districts

img

அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடக்கோரி சிபிஎம் போராட்டம்

சேலம், ஏப்.4- அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாரமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி, அருணாச் சலம் புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளை செயலாளர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை களை விளக்கி மாவட்ட செயலாளர் மேவை. சண்முக ராஜா, ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ்வரன் ஆகி யோர் பேசினர். இதில், அருணாச்சலம் புதூர் பகுதியில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். புதூர் பகுதியில் சாலை வசதி கள் செய்து தரவேண்டும். வீட்டுமனை பட்டா இல்லாத வர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் சின்ராஜ், கே.எம்.சுப்பிரமணி, மகேஸ்வரி, கே.செல்வகுமார், எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.