districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: தலித் மக்கள் சுடுகாட்டுப் பாதை பணி தொடக்கம்

தாராபுரம், செப். 28 - தாராபுரம் அடுத்த இடையன்கிணறு பகுதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சுடுகாட்டு பாதை கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சுடுகாட்டுக்குப் பாதை அமைக்கும் பணி  தொடங்கப்பட்டது. தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் இடை யன்கிணறு பகுதியில் சுமார் 200 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இந்த மக்கள், இறந்தவர் களை புதைப்பதற்கு செல்லும் சுடுகாட்டு பாதை புதர்மண்டி  குண்டும், குழியுமாக, ஒவ்வொரு முறையும், அவர்களே பாதையை சரி செய்த பின்னர்தான் அடக்கம் செய்ய கொண்டு  செல்லும் நிலை இருந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலூக்கா  செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர்,  கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதி காரிகளுக்கு நேரிலும், தபால் மூலமும் சுடுகாட்டுப் பாதையை  சீரமைத்துத் தரக் கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இறந்தவர் களை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு  வந்தனர்.  இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையன் கிணறு கிளை சார்பில், செப்.30 பி.சீனிவாசராவ் நினைவு தினத் தன்று குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்  முன்பு கிளை செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற் கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம்  சார்பில் மயானப்பாதைக்கு புதிதாக பேவர்பிளாக் சாலை  அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து மயானப்  பாதை அமைக்க பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.