ஈரோடு, டிச.16- உழைக்கும் மக்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு என்றைக்காவது இந்தியாவிற்கு விடிவு வரும் என்றால் அது கம்யூனிஸ்ட்டுகளால்தான் சாத்தி யம் என சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் நம்பிக்கை தெரிவித் தார். விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னோடிகளில் ஒருவரான தோழர் பி.ராம மூர்த்தி நினைவு தின கருத்தரங்கம், வெள்ளியன்று பவானியில் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரி முத்து தலைமையில் நடைபெற்ற நிகழ் வில், கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், சென்னை ராஜதானியின் முதல் எதிர்க் கட்சி தலைவர். பன்முகத்திறமை, சிறந்த ஆளுமைமிக்க தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி. பல தலைவர்களின் வர லாறை, தியாகங்களை இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டியி ருக்கிறது. விடுதலைப்போராட்ட வீரர் என்.சங்கரய்யாவைப் பற்றி பத்திரிக் கைகள் நேர்மையானவர், எளிமையான வர் என்று பொதுவாக எழுதுவார் கள். எளிமையும், நேர்மையும் அவர் களுடைய அடையாளமல்ல. கம்யூ னிஸ்ட்டாக இருப்பதன் உடன் நிகழ்வு தான் எளிமையும், நேர்மையும். அதன் உச்சத்திற்கு அருகே சென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வகையில், தோழர் பி.ராமமூர்த்தி கொண்டாடப்படுகிறார். பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியை பிராமணர்கள் கட்சி என்பார்கள். இந்தியாவில் தீண்டாமைக்கெதிராக போராடியதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களே முன்னணியில் இருந்த னர். சென்னையில் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலில் அருந்ததிய மக்களுக்கு வழிபட உரிமை இல்லை என்ற நிலையில், பி.ராமமூர்த்தி, அந்த கோவிலில் அருந்ததியர்களை அறங் காவலர் குழுவிற்கே தேர்ந்தெடுக்க வைத்தார். இதனை, மகாத்மா காந்தி ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் புகழ்ந்து விபரமாக எழுதுகிறார். தென்மாவட்டங்களில் கைரேகை சட்டம் என்ற கொடிய சட்டம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகம் திருமணமான முதல் நாளாக இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி காவல் நிலையத்தில் தான் படுக்க வேண்டும். வெளியூருக்குப் போகவேண்டுமென் றால் சொல்லிவிட்டுத்தான் போக வேண் டும் என்று வைத்திருந்தார்கள். அதற்கு எதிராகப் போராடி அந்த கொடிய சட்டத்தை திரும்பப் பெற வைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.
பாம்பையும், பார்ப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடி என்றவர் பெரியார். ஆனால், 1957 தேர்த லில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.பாலசுப்பிரமணியான பிராமணருக்கு வாக்கு கேட்டார் பெரியார். சூத்திர னாக இருந்துகொண்டு இந்த விசயங் களைப் பேசுவதொன்றும் வித்தியாச மில்லை. பிராமண சமூகத்தில் பிறந்தி ருக்கும் பாலசுப்பிரமணியம் அருந்த திய மக்களின் மேம்பாட்டிற்காக பேசு கிறார் என்றால், அவரைப்போல 10 பேர் வந்தால் நாம் தனியாக இயக்கத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார் பெரியார். அன்று ராமமூர்த் தியை எதிர்த்து பி.டி.ராஜன் நின்றார். அப்போது ராமமூர்த்திக்கு ஆதரவாக பெரியார் பிரச்சாரம் செய்தார். இதை யெல்லாம் இளைய தலைமுறைக்கு சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆங் கிலத்தில் பேசுவது வழக்கம். அதை முத லில் உடைத்து, தமிழை எப்படி பயன்ப டுத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தோழர் பி.ராம மூர்த்தி முன்வைத்தது முக்கியமானது. மொழிவாரி மாநிலத்தில் முன்நின்ற வர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இப்படி பேசிக்கொண்டே போகலாம். விடு தலை பெற்ற பிறகு பிஎச்இஎல் உருவாவ தற்குக் காரணமானவர். அந்நிறு வனத்தை சீமென்ஸ் என்கிற ஜெர்மன் நிறுவனத்திற்கு விற்க முயற்சி செய்த னர். அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போட்ட சண்டையினால்தான் பிஎச்இ எல் இன்றைக்கும் பொதுத்துறை நிறு வனமாக நீடிக்கிறது. இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் நவரத்தினங் களில் ஒன்றாக இருக்கிறது. இதுமட்டு மல்ல ஏராளமான பொதுத்துறை நிறுவ னங்களை உருவாக்க காரணமாக இருந்தவர் ராமமூர்த்தி.
தியாகங்களை தலைவர்கள் மட்டு மல்ல. அவர்களது குடும்பத்தினரும் செய்துள்ளனர். இவர்கள் சாதாரண மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப் பணித்தவர்கள். இதுபோல தோழர் என். சங்கரய்யா, வி.பி.சிந்தன் போன்றவர் கள் எல்லாருக்கும் வீடு, கல்வி, வேலை, மருத்துவம் கிடைக்க வேண்டும். சோச லிச, மதச்சார்பற்ற சமூகம் இருக்க வேண்டும் என்பதற்காக போராடியவர் கள். வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கள். இன்றைக்கு எல்லாவற்றிற்கும் ஒரு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஒரு வலதுசாரி அரசாங்கம், பாசிஸ்ட் அரசாங்கம் நமது சொத்துக் களை சுரண்டிக்கொழுக்கிறது. 10 ஆயிரம் கடன் வாங்கினால் அவன் சொத்துகளை ஏலம் விடுகிறான். 10 ஆயி ரம் கோடி கடன் வாங்கினால் தள்ளுபடி ஆகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அரிசி, கோதுமைக்கு வரி போட்டனர். அதற்குப் பிறகு மோடி ஆட்சியில்தான் உணவுபொருள்களுக்கு ஜிஎஸ்டி 5 விழுக்காடு வரி போட்டுள்ளனர். 64 விழுக்காடு வரியினை கீழே இருக்கிற சாதாரண மக்கள் செலுத்துகின்றனர். அன்றாடம் செலுத்துகிறோம். ஆனால் வருமான வரி செலுத்துபவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் செலுத்துவார். இப்படி ஏழைக ளுக்கு எதிரான ஒரு அரசாங்கம் இருக்கி றது. இது மாற்றப்பட வேண்டும். இவற் றிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும். சாதியாகவும், மதமாக, இன மாக பிரிக்கும் வேலையை சதாசர்வ காலமும் பாஜக செய்து கொண்டுள் ளது. இந்த முயற்சியில் நீதிமன்றம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை அடியாளா கப் பயன்படுத்துகிறது. என்றைக்காவது இந்தியாவிற்கு விடிவுகாலம் வரும் என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியினால்தான். நாம் செய்யவில்லை என்றால் நம் குழந்தை கள், பேரப்பிள்கைள் செய்ய வேண்டும். நாம் ஒழுங்காக செய்யவில்லை என் றால், அதற்கான தண்டனைகளை நம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் அனுபவிப்பார்கள். நம்முடைய நேற்றைய சந்ததி போராடியதால் அரசி யல் சுதந்திரம் பெற்றோம். நாம் இன்றைக்கு போராடவில்லை என்றால் நமது பொருளாதார சுதந்திரமும், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை யும் பாதுகாப்பில்லாமல் போகும். மீண்டும் பரமபதத்தைப் போல பூச்சியத் திலிருந்து ஆரம்பிக்க வேண்டி இருக் கும். எனவே, ராமமூர்த்தி, சங்கரய்யா, வி.பி.சிந்தனைப்போல நம்மை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும், என் றார்.