districts

img

அனுப்பர்பாளையம் - சோளிபாளையம் சாலையை சீரமைத்துத் தரக் கோரி சிபிஎம் சாலை மறியல்

திருப்பூர், டிச.15- அனுப்பர்பாளையம் - சோளிபாளை யம் சாலையை உடனடியாக சீர மைத்துத் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பா ளையம், வேலம்பாளையம், கணியம் பூண்டி, பொதிகை நகர், தண்ணீர்ப்பந் தல் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தினம்தோறும்  வேலம்பாளையம் -  சோளிபாளையம் சாலையைப் பயன்ப டுத்தி வருகின்றனர். இந்த சாலை சீர மைக்கப்படாமல் குண்டும் குழியுமாக  உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து கள் ஏற்படுகிறது. சாலை உடனடியாக சீர மைக்க கோரி கடந்த டிச.4 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையைச் சீரமைக்காவிட்டால் டிச.15 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படாததால் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.   இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உதவிப்பொறியாளர், பொதுமக்க ளுக்கு பாதிப்பில்லாத வகையில் ஜன. 15 ஆம் தேதிக்குள் சாலை அமைத்து தரு வதாக எழுத்துபூர்வமாக உறுதியளித் தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச. நந்தகோபால் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ், நகரக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் பங் கேற்றனர்.