அவிநாசி, ஆக.31- அவிநாசி அருகே மேற்கு வஞ்சிபாளையம் பகுதியில் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேற்கு வஞ்சிபாளையம் பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும். போயர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். வஞ்சிபாளையம் வரும் அரசு பேருந்துகள் மேம்பாலத்திற்குக் கீழே நின்று செல்ல வேண்டும் உட்பட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் மேற்கு வஞ்சிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கிளைச் செயலாளர் வி.சங்கர் தலைமை ஏற் றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிர மணியம், குமரவேல், தேவிகா உள்ளிட்டோர் முன்னிலையில் வகித்தனர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் முத்து சாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன் றியக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம், கிளைச் செயலாளர் கதிர்வேல் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.