சேலம், ஜூன் 6- சேலம் மாநகரில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாநகரில் அதிகரித்து வரும் கொலை, திருட்டு, வழிப்பறி உள் ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத் திடவும், போதைப்பொருட்கள் விற் பனையை முழுமையாக தடுக்கவும் வேண்டும். சமூகவிரோதிகள் அதி கம் நடமாடும் பகுதிகளை அடை யாளப்படுத்தி, கூடுதல் காவலர் களை ரோந்து பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மாநகரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பழுதடைந் திருப்பதை முறையாக பராமரிக்க வேண்டும். சமூக விரோதிகளுடன் ஆதாயத்திற்காக தொடர்பில் இருக் கும் காவல்துறையினர் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா உரையாற்றினார். இதில் சேலம் வடக்கு மாநகர குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர் கள் உட்பட திராளானோர் கலந்து கொண்டனர்.