கோவை, டிச.24- மின்சார சட்ட திருத் தம் - 2020 மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மின் அரங்க இடைக் கமிட்டி மாநாடு வலியு றுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மின் அரங்க இடைக் கமிட்டி 4 ஆவது மாநாடு கணபதி இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. தோழர் ஏபிஆர் நினைவரங்கத்தில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு வி.மதுசூதனன் தலைமை வகித்தார். கட்சியின் செங்கொடியை கே.கனகமுத்து ஏற்றி வைத் தார். இடைக்குழு செயலாளர் எஸ்.சென்னியப்பன் அறிக்கை சமர்பித்தார். இம்மாநாட்டில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி மற்றும் மின் அரங்க உபக்குழு மாநில கன்வீனர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், மின் விநியோகத்தை தனியா ருக்கு தாரை வார்க்கக்கூடாது. மாநில அரசின் உரிமை களை பறிக்கக்கூடாது. மின்சார சட்ட திருத்தம் - 2020 மசோதாவை திரும்பப்பெற வேண்டும். மின்வாரியத் தில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உட னடியாக நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து கோவை மின் அரங்க இடைக்குழு செய லாளராக டி.மணிகண்டன் உட்பட 7 பேர் கொண்ட அரங்க இடைக்குழு தேர்வு செய்யப்பட்டது.