திருப்பூர், மே 26- குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றிய கிளைகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாம் மண் டல அலுவலகத்தில் வியாழனன்று மனு அளிக்கப்பட்டது. குடிநீர், சாலை வசதி, பாதாளச்சாக் கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப் படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த ஞாயிறன்று பாண்டியன் நகர், சக்தி நகர், தோட்டத்துபாளையம் ஆகிய பகுதிகளில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதைத்தொ டர்ந்து, திருப்பூர் மாநகராட்சி இரண் டாம் மண்டலத்திற்கு உட்பட்ட 2,3,4,5, 7,8 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி கிளை கள் சார்பில் வியாழனன்று இரண்டாம் மண்டல கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது உரிய நட வடிக்கை எடுக்க இரண்டாம் மண்டல தலைவர் மற்றும் உதவி ஆணையாள ரின் கவனத்திற்கு கொண்டு செல்வ தாக கண்காணிப்பாளர் உறுதி அளித் தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஆர்.மைதிலி, ஆ.சிகாமணி, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் என். இளங்கோ, எஸ்.பானுமதி, கிளைச் செய லாளர்கள் இ.மங்கலட்சுமி, வி.செல்வகு மார், பொன்னுச்சாமி, எம்.எம்.தன்ராஜ் உட்பட பொதுமக்கள் திரளானோர் பங் கேற்றனர்.