districts

அவசர பொதுவழி நடைப்பாதை கேட்டு சிபிஎம் மனு

தருமபுரி, நவ.2- அரூர் பேருந்து நிலையத்தின் தெற்குபுறம் உள்ள சாலை அருகே அவ சர பொதுவழி நடைபாதை வசதி அமைத்துத்தர வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றியச் செய லாளர் பி.குமார், பேரூராட்சி செயல்  அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, அரூர் தேர்வுநிலை பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில் பழைய  பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளா கக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது இடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் தெற்குபுறம் செல்லும் சாலை, தீர்த்தமலை நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது. இச்சாலை வழியாக 12 கிராம ஊராட்சியைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோ றும் பயணித்து வருகின்றனர். இந்நிலை யில், மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த  தெற்குபுறம் சாலையை இணைக்கும் நடைபாதை, தற்போது அடைக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வாய்ப் புள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே, மக்கள்  நலன் கருதி அவசர பொதுவழி நடை பாதை வசதி அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள் ளது.