அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆட்சிக்கு கெட்டப்பெயர் திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
கள எதார்த்தம் தெரியாமல் கோவை மாநக ராட்சி அதிகாரிகள் அலட்சியமாக பணியாற்றுவ தால் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவ தாக கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி யதால் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் பேசி மாமன்ற உறுப்பினர்கள், கேபிள் பதிக்கும் பணி, சூயஸ் பணி ஆகியவற் றால் மாநகரத்தின் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. மாதக்கணக்கு ஆனாலும் இதனை சரி செய்ய அதிகாரிகள் முன் வருவதில்லை. இதேபோன்று தெருநாய்கள் தொல்லை என்பது அதிகரித்துள்ளது. இதனை பிடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்வ தில்லை. தெருவெங்கும் குப்பைகள் குவிந்து கிடக் கிறது. அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை. கள எதார்த்தம் தெரியாமல் அறையில் இருந்து கொண்டு இவர்கள் போடும் உத்தரவால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நேரி டையாக மக்களை சந்திப்பவர்கள் மாமன்ற உறுப்பி னர்கள். மக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்லவே முடிவதில்லை. தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத் தால் அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். குறிப்பாக தெருநாய்களை பிடிப்பது தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. இதற்கு அதி காரிகள் பதில் சொல்ல முடியாமல் தினறினர்.
கோவை, நவ.30- கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் புதனன்று விக் டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில், துணை ஆணையர் சர்மிளா, துணை மேயர் இரா.வெற்றிச் செல்வன் மற்றும் மண்டல தலை வர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வி.இராமமூர்த்தி, ஆர்.பூபதி, சுமதி மற்றும் கண்ணகி ஆகியோர் பங் கேற்று கருத்துக்களை முன்வைத் தனர்.
முன்னதாக, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி பேசு கையில், மாநகராட்சி விதி 272 மற்றும் 273ன்படி முறையற்ற கட்டி டங்களை முறைப்படுத்த அப ராதம் விதிக்கப்படுகிறது. இவ் வாறான கட்டிடங்கள் கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 50 சத விகிதற்கும் மேல் உள்ளது. இத் தகைய வீடுகளுக்கு மாநகராட்சி அபராதம் விதித்து வரி விதித்து வசூலும் செய்துவிடுகிறது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறு வதற்காக சென்றால், முறைப் படுத்தப்பட்ட சான்றிதழ் கேட்கப் படுகிறது. இச்சான்றிதழ்களை கொடுப்பதற்கு வேறு எந்த மாநக ராட்சியிலும் இல்லாத அளவிற்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி செய்து மக்களை அலை கழிக்க வைக்கிறார்கள். அபராதம் விதித்து வரி வசூல் செய்த பிறகு முறைப்படுத்துதல் சான்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அத்தகைய தேவையற்ற விதி களை ரத்து செய்ய வேண்டும் என்றார். மேலும், கோவை மாநக ராட்சியின் ஐந்து மண்டலங்களில் உள்ள மண்டல நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர் களுக்கு 7 குளிர்சாதன வசதி கொண்ட வாகனங்களை வாட கைக்கு எடுப்பது எனவும், இதனை, 16 மாதங்களுக்கு 68 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்வது என தீர்மானம் முன்மொழியப் பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை வெளிப்படுத் தியது, ஒரு வாகனத்தை சொந்த மாக ரூ.10 லட்சத்திற்கு வாங்கி விட முடியும், அப்படி இருக்கையில், 7 வாகனங்களுக்கு ரூ.70 லட்சம் வாடகையாக செலுத்துவது மக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவது என குற்றஞ்சாட்டினர். இதற்கு மற்ற உறுப்பினர்களும் ஆதரவ ளித்தனர். இதனையேற்று இத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல பாதாளச்சாக்கடை திட்டத்திற்கு கட்டணம் நிர்ணயிப் பது தொடர்பான தீர்மானத்திற்கு சிபிஎம், சிபிஐ, அதிமுக மற்றும் ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர் களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைக்குழுவிற்கே கொண்டு வராமல் தீர்மானம் கொண்டு வருவ தாக குற்றம்சாட்டினர். கடும் எதிர்ப் பையும் மீறி இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதேபோன்று அரசாணை 152 குறித்த தீர்மானத் திற்கு ஏற்கனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பணியிடங்களை அவுட்சோர்சிங் விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இத்தீர்மானத்தை முறைப்படுத்த மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என முடிவெடுக்கப்பட்டது. இதேபோன்று, கோவை மாநக ராட்சிக்குட்பட்ட 77, 78 வார்டுகளில் குடிசை மாற்று வாரிய இடத்தில் உள்ள 119 பொதுக்குழாய்களை அகற்றி நேரிடையாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழக்குவது எனவும், இந்த வீடுகளில் வசிப்ப வர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்பதால் இவர் களுக்கான வைப்பு தொகை மற்றும் மேற்பார்வை கட்டண விலக்கு அளிப்பது என்கிற தீர்மானம் முன் மொழியப்பட்டது. இதனை ஆத ரித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சி யின் உறுப்பினர்கள், இதே போன்று மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய உழைப் பாளி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கும் குடிநீர் கட்டணத்தில் விலக்கு, வைப்பு தொகையில் விலக்கு அளிக்க வேண்டும் என்றனர். இந்த கோரிக்கையை இதர மாமன்ற உறுப்பினர்களும் முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய மேயர், கட்டணம் செலுத்த முடியாத மக்கள் உள்ள பகுதிகளை பட்டியல் எடுப்பது என்றும், இதனை தொகுத்து அடுத்த கூட்டத்தில் இறுதி செய்வது எனவும் முடி வெடுக்கப்பட்டது.