districts

img

சிபிஎம் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா

அவிநாசி பிப்.20– மார்க்சிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் கட்சிக்கிளை அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சௌடாம்பிகை நக ரில், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலை வர் சாமியப்பன் நினைவாக வஞ்சிபாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கள் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, ஒன் றிய கவுன்சிலர் பி. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் ஊராட்சி  மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள்  முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ. முத்துகண்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். வெங்கடாசலம், ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், திருமுருகன்பூண்டி  நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக. அப்பகுதி கட்சி கிளைகள் கட்சி நிதி மற்றும் கட்டிட நிதிகளை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் வழங் கினர். மேலும் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சாமியப்பன் குடும்பத்தின ருக்கும், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், கட்சி கிளை செயலாளர்களுக்கும் மாநிலக் குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலா ளர் முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால் உள்ளிட்டோர் பய னாடை அணிவித்து கௌரவித்தனர்.