districts

img

சிபிஎம் வடக்கு மாநகரக்குழு பேரவை: கட்சி வளர்ச்சி நிதி ரூ.4.89 லட்சம் வழங்கல்

திருப்பூர், மார்ச் 5-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாந கரக்குழு சார்பில் நடைபெற்ற பேரவையில் கட்சி வளர்ச்சி நிதி யாக ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 701 அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு  மாநகரக்குழு பேரவை செவ்வாயன்று தியாகி பழனிச்சாமி  நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகரக்குழு  உறுப்பினர் பா.செளந்தராசன் தலைமை வகித்தார். இதில்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, கே.காமராஜ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில், வடக்கு மாநகரக்குழு சார் பில் கட்சி வளர்ச்சி நிதி ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 701 மாநிலக்  குழு உறுப்பினர்களிடம் அளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உண்ணிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, வை.ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில்  மாநகரக்குழு உறுப்பினர் ஒய்.அன்பு நன்றி கூறினார்.