கோவை, பிப்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு முன் முயற்சியில் நடைபெறும் சாலை பணிகளை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகரட்சிக்குட்பட்ட 28 வது வார்டில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி சாலை, பாதாள சாக்கடை பணிகள், சூயஸ் குடிநீர் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை பல நாட்கள் மூடாமல் இருந்தன. இச்சாலை பெரும்பகுதி மக்கள் பயன்படுத்தும் சக்தி சாலை, அவிநாசி சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந் நிலையில் குண்டும், குழியுமாக இருந்த தால் அனைத்து தரப்பினரும் அவதிக்குள் ளாகி வந்தனர். இதுகுறித்து, 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தார். இதையடுத்து சாலையை புதிப்பிக்க ரூ. 83.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணி களை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் சனியன்று நேரில் சென்று பார்வை யிட்டார். இந்த ஆய்வில் போது, கோவை வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், உதவி பொறியாளர் மகேஷ், சுகா தார ஆய்வாளர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, சிபிஎம் கிளைச் செய லாளர் கனி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.