கோவை, டிச. 15- மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தொடர் முயற்சியின் கார ணமாக, உடையாம்பாளையம் நடுநி லைப்பள்ளியின் புதிய கட்டடத் திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்ட நிலையில் இதற்கான அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. கோவை மாநகராட்சி 12 ஆவது வார்டு உடையாம்பாளையம் கிராமத் தில் 1959 ஆம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவ ரும், அன்றைய ஊராட்சி மன்ற தலை வருமான ஆர்.வெங்கிடுவின் முயற் சியில் நடுநிலைப்பள்ளி துவக்கப் பட்டது. இது, 1982 ஆம் ஆண்டு நடு நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. அப்போது கட்டப்பட்ட கட்டி டத்தில் பராமரிப்பு மட்டும் செய்யப் பட்டு வந்தது. சுமார் அறுபது ஆண்டு கள் பழைமையான இந்த கட்டி டத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சிபிஎம் 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார். புதிய கட்டடத்தை கட்டுவதற்கு கூடுதல் நிதி தேவை என்பதனால், கூடுதல் நிதியை அரசிடம் கேட்க வேண் டுகோள் விடுத்தார். இந்நிலையில், தமிழக முதல் வர் அறிவித்த உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தினை அறிவித்தி ருந்தார். இதனை பயன்படுத்தி பள்ளிக்கு புதிய கட்டடத்தை கட்டி தர கோரிக்கை விடுத்தார். இதற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்கு மார் உங்கள் தொகுதி திட்டத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரிந் துரை செய்தார். இதனைத்தொ டர்ந்து, பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள் கட்டிடத்தின் தன் மையை உணர்ந்து உங்கள் தொகுதி யில் முதல்வர் திட்டத்தில் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு 99.50 லட்சத்தில் மதிப்பீடு தயாரித்து அனுமதி வழங்கினர். இத னையடுத்து, வியாழனன்று புதிய பள்ளி கட்டடத்திற்கான அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் பங்கேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் சி.தன்னாசி, கோவை வடக்குமண்டல தலைவர் வே.கதிர்வேல், சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யுகே.வெள்ளி யங்கிரி, மாமன்ற உறுப்பினர்கள் வி.இராமமூர்த்தி, சுமதி, திமுக பகுதி கழக செயலாளர் சிவா என்ற பழ னிச்சாமி, திமுக வட்டச்செயலாளர் சி.முத்துச்சாமி, காங்கிரஸ் கட்சியின் அருணாசலம் பழனிச்சாமி, கொங் குநாடு மக்கள் கட்சியின் சோமு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி யின் எஸ்.பி.சுப்ரமணியன், துரைசங் கர், ஆர்.செந்தில்குமார், அதிமுக மாரப்பன் மற்றும் உடையாம்ப ளையம் கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர்கள் சோமசுந்தரம், சிவராம லிங்கம் மற்றும கிராம பொதுமக் கள் பங்கேற்றனர்.