சேலம், மார்ச் 22- தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதி ராக, மதவெறியை தூண்டுகின்ற வகையி லும், மத அடிப்படையில் வாக்குகளை கோரு கின்ற இழிவான செயல்பாட்டில் ஈடுபட்ட பிரத மர் நரேந்திர மோடி மற்றும் பொறுப்பாளர்க ளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க் சிஸ்ட் கட்சியினர், சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த னர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழுவின் சார்பில் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முகராஜா அளித் துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதா வது, வருகின்ற 2024 ஏப்ரல் 19 தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் சேலம் மாவட் டம், கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக கூட் டணி கட்சியின் சார்பாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்தி டும் நமக்கெல்லாம் அதன் சக்தி என்னவென் பது தெரியும். அதை அழிப்பது ஒன்றே தனது நோக்கம் என காங்கிரஸ், திமுக பிரச்சா ரத்தை தொடங்கி இருக்கின்றார்கள் எனவும், இந்தியா கூட்டணியை இந்து மதத்தை அழிப் பது தனது நோக்கம் என கொண்டவர்கள் என பேசியது அப்பட்டமான மத வெறியை தூண்டு விடுகிற செயலாகும். அதுவும் இந்தி யாவின் பெரும்பான்மையாக உள்ள இந்து மத நம்பிக்கையாளர்களின் மத்தியில் இந் தியா கூட்டணி மீது மத துவேஷத்தை கிளப்பி விடுகின்ற செயலாகும். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும். மேலும், காங்கி ரஸ் திமுக கூட்டணி இருக்கிறதே அவர்கள் சக்தியின் வடிவத்தை இதன் ஆன்மீக அம் சத்தை சனாதனத்தை அழித்து விட நினைக்கி றார்கள் என அப்பட்டமாக மத விரோதத்தை உருவாக்கும் நோக்கத்திலேயே பேசி உள்ள னர். மேற்கண்ட பிரதமரின் பேச்சு கடவுளின் பெயர்களை கூறி வாக்குகள் சேகரிப்பதி லும், கூட்டணி பற்றி அவதூறாக செய்திகளை மத துவேஷத்தை உருவாக்கின்ற வேலை யாக உள்ளது. மேற்கண்ட குற்றச்சாட்டுகள் புகார்கள் அனைத்தும் உண்மையானவை. பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கே.பி.ராமலிங்கம், இந்த கூட்டத்திற்கு ஏற் பாடு செய்த பாஜக மாநில தலைவர் அண்ணா மலை, மற்றும் இந்த குற்றச்சாட்டுகள் எல் லாம் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதி ராக செய்யப்பட்ட பிரச்சாரங்கள் எனத் தெரிந் தும், செவிமடுத்து அமைதியாக ஆதரவு தந்து மேடையில் வீற்றிருந்த கூட்டணி கட்சித் தலை வர்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என அதில் தெரிவித்துள்ளார்.