districts

img

இடிந்து விழும் நிலையில் காங்கிரீட் பாலம் விரைந்து செப்பனிட சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 13- அனுப்பர்பாளையத்தில் போடப்பட் டுள்ள கான்கிரீட் கல்வெட்டு இடிந்து விழுகும் நிலையில் உள்ளதால், உடண டியாக சீரமைத்து தர வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலம்பாளை யம் நகர குழு சார்பில் முதலாம் மண்டல அலுவலகத்தில் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலம்பாளையம் நகரக்குழு உறுப் பினர் அ.ஆறுமுகம் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்ட லம் வார்டு எண் 11 க்கு உட்பட்ட அனுப்பர் பாளையம், காந்தி ரோடு டாக்டர் ஆறுமு கம் மருத்துவமனை வீதியின் தொடக் கத்தில் சாக்கடையின் மேல் போடப்பட் டுள்ள கான்கிரீட் கல்வெட்டு மழை நீர்  அரிப்பால் உடைந்து விடும் நிலையில் உள்ளது. இது குறித்து கடந்த ஏப்ரல்  மாதம் பொது மக்களிடம் கையெழுத்து  பெற்று மனுவாகவும், அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு கடந்த  மே  மாதம்  நேரில் சென்றும் தெரிவிக்கப்பட் டது. இதைதொடர்ந்து மாநகராட்சி அதி காரிகள், பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர் மற்றும் குடி நீர் பணியாளர்கள் நேரில் வந்து பார்வை யிட்டு விரைவில் சீரமைக்கும் பணி தொடங்குவதாக தெரிவித்தனர். இதற் கான மதிப்பீட்டுத் தொகையாக ரூ.1.47  ஆயிரம் திருப்பூர் மக்களவை உறுப்பி னர் தெற்கு மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும்  இன்று வரை பணிகள் தொடங்கப்பட வில்லை. இந்நிலையில் பாலம் நாளுக்கு நாள்  பலவீனமடைந்து பாதி உடைந்து விட் டது. மீதி பாதியும் எப்போது வேண்டு மானாலும் உடைந்து விழும் நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. இவ்வீதி யில் மருத்துவமனை உள்ளதால் நோயாளிகளை அழைத்து வரும் வாக னங்கள் இதில் சிக்கிக் கொண்டால் ஏதே னும் விரும்பத்தகாத நிலை ஏற்பட்டு  விடுமோ என அச்சமாக உள்ளது. இவ் வீதியில் தொழில் நிறுவனங்கள் உள் ளன. இந்த கல்வெட்டை கடந்து ஆட்டோ, வேன் போன்ற வாகனங்க ளும் சென்று வர முடியவில்லை. இந்த  வீதிக்குள் செல்ல மாற்ற பாதையும் இல்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம்  உடனடியாக தரமான புதிய கல் வெட்டை அமைத்து தர வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செய லாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் பி.சின்னச்சாமி, கிளைச் செயலாளர்கள் ஏ.முத்துக்குமார், சாந்தி,  மாதர் சங்க நிர்வாகி கிருஷ்ண வேணி, மூத்த நிர்வாகி கணேசன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.