districts

நெருப்பெரிச்சலில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள் புற காவல் நிலையம் அமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர் ஜன. 5 - நெருப்பெரிச்சல் வட்டாரத்தில் போதை மற்றும் சமூக விரோத கும்பலின் குற்ற செயல் கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்  தன்ராஜ் உள்ளிட்டோர் வெள்ளியன்று  மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபி நபுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர். இம்மனுவில் கூறப்பட்டுள்ள விபரம்  வருமாறு: திருப்பூர் மாநகரம் திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெருப்பெரிச்சல் கிராமம், அரசு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் ஜனவரி 2 ஆம்  தேதி சமூக விரோத செயல்களில் ஈடுபடும்  நபர்களால் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் சேகர் என்பவர் கொடூரமாக  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக் கிறார். கடந்த காலங்களில் பாரதி நகர்,  மே நகர், குருவாயூரப்பன் நகர், வாவிபா ளையம், நெருப்பெரிச்சல், சேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு  குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையில் புகார் செய்வதும் மேல் நடவடிக்கைக்காக காவல்துறை உயர்  அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதும் நடைபெற்றுள்ளது. மேற்கண்ட பகுதிக ளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதும், தொழில் நிறுவனங்களில் சமூக  விரோதிகள் சென்று மிரட்டுவதும், வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களும், சாலை விபத்து களும் இப்பகுதிகளை சுற்றி தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. கடந்த காலங்களில் அடிதடி  தகராறு, வியாபார நிறுவனங்களில் மிரட்டு வது, வழிப்பறி, தனிநபர் தாக்குதல்கள், போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு என்று நடந்து வந்த நிலையில், கடந்த இரு  தினங்களுக்கு முன்பு இந்த குற்ற செயல்கள்  எல்லை மீறிப் போய் ஒரு இளைஞரை படு கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.  மேற்கண்ட சம்பவங்கள் இப்பகுதி மக்க ளிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.  அதேசமயம் இப்பகுதியில் குற்ற செயல்க ளால் பாதிக்கப்படுபவர்கள் காவல்துறைக்கு புகார் செய்வதற்கு செல்ல 20 கிலோ மீட்ட ருக்கு அப்பால் இருக்கக்கூடிய ராக்கியா பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருமு ருகன் பூண்டி காவல் நிலையத்திற்கு சென்று  புகார் மனு கொடுக்க வேண்டிய நிலை உள் ளது. இதனால் பொதுமக்களுக்கு நேர  விரயமும், மன உளைச்சலும் அதிகமாகிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று  வருவதற்கு முறையான போக்குவரத்து வச தியும் இப்பகுதிகளை இணைப்பதற்கான போக்குவரத்து வசதியும் இல்லை. வாகன வசதி இல்லாதவர்கள் பேருந்தில் செல்ல வேண்டும் என்றால் புஷ்பா தியேட்டர் சென்று  அங்கிருந்து அவிநாசி செல்லுகிற பேருந் தில் ஏறி அம்மாபாளையம் பேருந்து நிறுத்தத் தில் இறங்கி பிறகு ராக்கியாபாளையம் சென்று காவல் நிலையத்திற்கு புகார் கொ டுக்க வேண்டிய நிலை உள்ளது. மேற்படி காவல் நிலையத்தில் புகார்  கொடுத்து காவல் துறையைச் சார்ந்த வர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகிற போது குற்றச் செயல்க ளுடைய தன்மை மாறி விடுகிறது. தொலை பேசி மூலமாக புகார் அளித்தாலும் கூட  காவல்துறையினர் வந்து சேர்வதற்குள் குற்ற  செயல்கள் நடந்து முடிந்து விடுகிறது. குற்ற வாளிகளும் தப்பி விடுகிறார்கள். எனவே திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் வரு வாய் கிராமத்தில் கிட்டத்தட்ட 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய் கிற வகையில், நெருப்பெரிச்சல் பகுதியை மையமாக வைத்து புற காவல் நிலையம் அமைக்க வேண்டும். காவல் துறையின் கண் காணிப்பு கூடுதல் படுத்த வேண்டும். படுகொலை செய்யப்பட்ட  இளைஞர் சேகர் குடும்பத்திற்கு நிவாரணமும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக் கையும் மேற்கொள்ள வேன்டும் என வலியுறுத்தியுள்ளனர்.