உதகை, ஏப்.21- தமிழக – கேரள கலாச்சார உறவை வலுப்படுத்தும் வகையி லும், பன்முக கலாச்சார, பண்பாட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகை யிலும், பல்லாண்டுகளாக கல்வி, சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும், உதகை கேரளா கிளப் வளா கத்தை மீண்டும் ஒப்படைக்க வேண் டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்ட தலைநகரான உத கையில், 1933 ஆம் ஆண்டு முதல் கேரளா கிளப் எனும் கலாச்சார அமைப்பு இயங்கி வருகிறது. இவ்வ மைப்பு பன்முகத் தன்மையிலான கல்வி மற்றும் பண்பாட்டு நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, தமிழக - கேரள மக்களின் கலாச்சார உறவுகளுக்கு பாலமாகவும் செயல் பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தி லும், குறிப்பாக உதகையில் மிகக் கணிசமான எண்ணிக்கையிலும் வசிக் கும் மலையாள மக்களுக்கு பல் வேறு வகையிலும் உதவிகரமான செயல்பாட்டில் உதகை கேரளா கிளப் நிறுவனம் செயல்பட்டு வந்தது. உதகை கேரளா கிளப் அமைப் பின் செயல்பாட்டிற்காக உதகையின் மையப்பகுதியான ஹேவ்லாக் சாலை யில் சுமார் 40 சென்ட் நிலத்தை 1976 ஆம் ஆண்டில் (அரசாணை எண் 2645 நாள் 29.12.1976) ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு, மேற்படி நிலத்திற் கான ஆண்டு வாடகையும் வசூலித்து வந்தது. இந்நிலையில், திடீரென ஆண்டு வாடகை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதோடு, நிலுவை தொகையாக ரூ.5,48,621.00 ஐ உடன டியாக கட்ட வேண்டுமெனவும் 10.06.2002ல் உதகை வருவாய் வட் டாட்சியரால் உத்தரவும் பிறப்பிக்கப் பட்டது. அதன்படி உதகை கேரளா கிளப் சார்பில் ரூ.2 லட்சம் அரசுக்கு செலுத்தப்பட்டதோடு, மேற்படி தொகையை கட்டுவதற்கான கால அவகாசம் கேட்டும்,
ஆண்டு வாட கையை குறைத்து தர வேண்டுமென வும் கோரிக்கை விடுத்தது. ஆனால், அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படாமல் உதகை கேரளா கிளப் செயல் பட்டு வந்த வளாகத்தை அரசே மீண் டும் எடுத்துக் கொண்டு விட்டது. சுமார் 90 ஆண்டுகாலம் மிகச் சிறப் பான முறையிலும், கைரளி கல்வி நிலையம், நாட்டிய பயிற்சி, சிறுவர் களுக்கான உடற்பயிற்சிகள், கலாச் சார நிகழ்வுகள் என பன்முகத் தன்மை யில் இயங்கி வந்த உதகை கேரளா கிளப் தற்போது இயங்காமல் முடக் கப்பட்டிருப்பது சரியானதல்ல. நீல கிரியில் மிகக் கணிசமான எண்ணிக் கையில் மலையாள மொழி பேசும் மக் கள் வசித்து வருவதோடு, நீலகிரி மாவட்டத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை அளித்து வருகின்ற னர். இந்நிலையில், அம்மக்களின் கோரிக்கையை ஏற்றும், தமிழக – கேரள கலாச்சார உறவை வலுப்படுத் தும் வகையிலும், பன்முக கலாச் சார, பண்பாட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையிலும் உதகை கேரளா கிளப் செயல்பட்டு வந்த இடத்தை மீண்டும் அவர்களிடம் ஒப் படைக்க முன்வர வேண்டுமென தமிழ் நாடு அரசையும், மாவட்ட நிர்வாகத் தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு வலி யுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.