கோவை, ஜன. 9- கோவை ஒண்டிபுதூர் அருகே மாந கராட்சி துவக்கப்பள்ளிக்கு சொந்த மான மைதானத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு, மீண்டும் பள்ளிக்கே வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் பகுதிகுழுச் செயலாளர் தெய்வேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 1960 ஆம் ஆண்டு புரமோட்டர் ராஜ கோபால் என்பவரால் போடப்பட்ட 65 வீட்டுமனை லே அவுட்களில், 62 சென்ட் இடம் பொது பயன்பாடிற்கு என அனு மதிபெற்று விற்பனை செய்து வந்தார். அதில் 18 வீட்டுமனைகள் விற்பனை யாகாத சூழலில், எஸ்.என்.சுப்ரமணி யம் என்பவருக்கு, புரமோட்டர் ராஜ கோபால், நிலங்களை எழுதி கொடுத் துள்ளார். அப்போதைய நகரசபை உறுப்பினராக இருந்த எஸ்.என்.சுப்ரம ணியம், அந்த இடங்களை விற்பனை செய்ததோடு, ரிசர்வ சைட்டாக இருந்த 62 சென்ட் இடத்தையும் தமது கட்டுபாட் டில் வைத்துக்கொண்டார். பொதுபயன் பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பதை எதிர்த்து, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், அந்த இடத்தில் மாநகராட்சி துவக்கப்பள்ளி கட்டபட்டு, மீதி இடம் மைதானமாகவும், பூங்காவாகவும் விடப்பட்டது. இந்நிலையில், எஸ்.என்.சுப்ரமணி யத்தின் வாரிசுகள், தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, பொதுப யன்பாட்டிற்கான இடத்தை மூன்று பகு தியாக பிரித்து வேறொரு நபருக்கு மாற்றி பத்திரபதிவு செய்துள்ளனர். அப்போதைய மாமன்ற கூட்டத்திலும் அவர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்து போராட்டம் நடத்தவே, ஆர்டிஓ விசாரனை நடத்தி எஸ்.என்.சுப்ரமணியம் வாரிசுகளுக்கு சாதகமாக தீர்ப்பு கூறபட்டது. பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தினை விற்பனை செய்ய முடியாது என நீதிமன்றமே கூறி யுள்ள நிலையில். தனிநபர் ஒருவ ருக்கு விற்றது செல்லாது என குடி யிருப்போர் நலச்சங்கம் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது. நீண்ட காலமாக தொடரும் இப்பிரச்ச னையில் மாவட்ட நிரவாகம் தலை யிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு பள்ளிக்கான விளையாட்டு மைதா னமாக மாற்றி தரவேண்டும் என தெரி வித்துள்ளார்.