districts

img

சுவரொட்டியை கிழித்த வட்டாட்சியர்: சிபிஎம் ஆவேசம்

பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டாகுமா?

சேலம், பிப்.10- மக்கள் கோரிக்கைகளை பட்டியலிட்ட சுவரொட்டியை கிழித்தெறியும் ஓமலூர் வட் டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதி மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்காக மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிப்பு  சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந் தது. அதனை ஓமலூர் வட்டாட்சியர் வல்ல  முனியப்பன் கிழித்தெறிந்துள்ளார். அரசின்  கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு  செல்ல சுவரொட்டியை ஒட்டினால், இக்கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ள அதிகாரி அதனை செய்யாமல் சுவ ரொட்டியை கிழித்தெறிந்தது, பூனை கண் மூடி னால் உலகம் இருட்டு என்கிற கதையாக  வட்டாட்சியர் செயல்பாடு உள்ளது என மார்க் சிஸ்ட் கட்சியினர் விமர்சித்துள்ளனர். மேலும் ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவிற்கு தனி கோட்டாட்சியர் அலுவலகம் திறக்க வேண் டும். காடையாம்பட்டி பகுதிக்கு தனி பத்திரப் பதிவு அலுவலகம் திறக்க வேண்டும். சிவில், ஜீவனாம்சம் குற்ற வழக்கு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த கீழமை நீதிமன்றம் அமைக்க வேண்டும். காந்தி நகர், காமலாபுரம், குண் டூர், தும்பிபாடி, ஆண்டிப்பட்டி, பொட்டியா புரம் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநில  செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலுகா குழு உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.