தருமபுரி, பிப்.7- தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடும் வகையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பிப். 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு கூட்டம் தரும புரி மாவட்டக்குழு அலுவலகத்தில், மாவட்ட குழு உறுப்பினர் கே.குப்புசாமி தலைமை யில் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செய லாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலா ளர் என்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தருமபுரி நகராட்சி 16 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி போட்டியிடு கிறார். இவரது வெற்றிக்கு மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பது என முடிவு செய் யப்பட்டது.