கோவை, மே 13- கோவையில் அரசு குடியிருப்பு கட்டுமான பணிகளை விரைந்து முடிந்து, பயனாளிகளுக்கு வீடு களை ஒதுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், சித்தாபுதூ ரில் உள்ள வி.கே.கே.மேனன் சாலையில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஏழு மாடி குடி யிருப்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. 18 மாதங் களில் முடித்து தருவதாக ஒப்பந் தம் செய்யப்பட்டது. ஆனால், பணி கள் துவங்கி 5 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இருப்பினும் கட்டிடப் பணிகள் தற்போது வரை முழுமை பெறவில்லை. முன்னதாக, இங்கு வசித்து வந்த 216 குடும்பங்களைச் சேர்ந்தோர் மாநகராட்சி தூய் மைப் பணியாளர்கள் ஆவார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற் றப்படும் போது, புதிய குடியிருப் பில் எவ்வித கட்டணமின்றி அவர் களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வீடு வேண்டு மென்றால் 96 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள் ளது.
இந்நிலையில், வாக்குறுதி அளித் ததைப்போல் கட்டணம் இல்லாமல் வீடுகளை ஒப்படைக்க வேண்டும். ஏழு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் கோவை பவர்ஹவுஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், அமைப் புக்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவ ஞானம், கே.மனோகரன், கே.அஜய் குமார், கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திலிருந்து வந்த ஒரு ஊழியர், ஒவ்வொரு தளத்தி லும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடி நீர் இணைப்பு பணிகளை ஜூலை மாதம் இறுதிக்குள் முடித்து வீடுகள் ஒப்படைக்கப்படும் என உறுதிய ளித்துச் சென்றனர்.