districts

img

குடிநீர் கேட்ட பொதுமக்களை ரவுடி என்பதா?

அவிநாசி, மே 30- குடிநீர் கேட்டு மனு கொடுக்க வந்த  பொதுமக்களை ரவுடி என கூறிய திரு முருகன்பூண்டி நகராட்சி தலைவ ருக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சி லர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற  கூட்டம் தலைவர் குமார் தலைமை யில், நகராட்சி ஆணையர் அப்துல்  ஹாரிஸ் முன்னிலையில் நடைபெற்றது.  இதில், நகர் மன்ற உறுப்பினர்கள் பங் கேற்றனர். முன்னதாக, நகராட்சி தலைவர் குமார், குடிநீர் வழங்க கோரிய மக்கள்  ரவுடிகளை போல நடந்து கொள் கிறார்கள். வெளியூரிலிருந்து ஆட் களை அழைத்து வந்து பிரச்சனை யில் ஈடுபடுவதாக கூறி தலைவர் இருக் கையில் அமர்ந்தார். கோரிக்கை மனுக்க ளோடு வந்த மக்களை ரவுடி என நகர்  மன்ற தலைவர் அநாகரீகமாக பேசியது  உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிர மணியம், தேவராஜன் கடும் கண்டனம்  தெரிவித்தனர். அவர்கள் பேசுகையில்,  ஜனநாயக ரீதியாக குடிநீர் கேட்டு வந்த பொதுமக்களை ரவுடிகள் போல நடந்து கொண்டார்கள் என கூறு வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைவரும் திருமுருகன்பூண்டி நகராட்சி குடியிருப்புவாசிகள். அவர் களை வெளியூர்காரர் என்று கூறுவதா?  இதனை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டிக்கிறோம், என்றனர். மேலும், சிபிஎம் 10ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் பேசுகையில், வரவு-செலவு கணக்கு களை உடனடியாக மன்ற கூட்டத்தில் வைக்க வேண்டும். வார்டு சபா கூட்டத் தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் நடைபெற வில்லை. இதனை முறையாக நடத்தி இருந்தால் மக்கள் குடிநீர் கேட்டு நக ராட்சியை நோக்கி வருகின்ற அவசியம்  இருந்திருக்காது. திருப்பூர் மாநகராட்சி யில் மற்றும் பல்லடம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் மாதம் ரூ.100 வசூலிக் கப்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை  குடிநீர் வருகிறது. ஆனால் திருமுருகன் பூண்டியில் குடிநீர் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. குடிநீரும் 20  நாட்களுக்கு ஒரு முறைதான் விநியோ கிக்கப்படுகிறது. புதிய இணைப்புகள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.   எனவே, உடனடியாக குடிநீர் இணைப்பு கள் வழங்க வேண்டும் என்றார்.  14ஆவது வார்டு சிபிஎம் நகர மன்ற உறுப்பினர் தேவராஜன் பேசுகையில்,  குப்பை அள்ளுவதற்கு வாடகை டிராக்டர் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு வாடகை மட்டும் ரூ.6.40 லட்சம்  வழங்கி உள்ளனர். இதற்கு பதிலாக  புதிய டிராக்டாரே வாங்கி இருக்கலாம்.  நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் உள் ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை களை மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்கள் முன்வைத்தனர்.