districts

img

வாலிபர் கொலை: சாட்சிகளை மிரட்டும் கும்பல்

சேலம், ஜன.11- ஓமலூர் வாலிபர் கொலை வழக் கில் சாட்சிகளை மிரட்டும் கும்பல் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார ளித்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, செங்கனூர் பகுதியில் கடந்த டிச.31 ஆம்  தேதியன்று ஸ்ரீதர் என்கிற செந்தில் தாக் கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஓமலூர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந் தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு,  அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், கொலை குற் றத்தில் கைது செய்யப்பட்ட சிவப்பிர காசம் என்பவரின் பெற்றோர், கொலை செய்யப்பட்ட ஸ்ரீதர் குடும்பத்தினரை யும், உறவினர்களையும் மிரட்டுவதாக வும், பழிவாங்கும் நடவடிக்கையில் எதிர் தரப்பினர் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கொலை  மிரட்டல் விடுத்து வரும் சிவப்பிரகா சத்தின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, ஓமலூர் வட்ட  செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பாதிக்கப் பட்ட குடும்பத்திலிருந்து ஈஸ்வரன் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.