அவிநாசி,ஆக.21- வார்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் வியாழனன்று நகர மன்ற தலைவர் குமார் தலைமையில், நகராட்சி ஆணையர் சம்சு தீன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணி பேசுகையில். கூட்டம் நடைபெறும் போது மினிட் புத்தகம் நகர மன்ற உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆனால், முறையாக வைப்ப தில்லை, நகர மன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் இன்றி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், ஒரு வார்டுக்கு அதிக நிதியும் மற்றொரு வார்டுக்கு குறை வான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை முறைப்படுத்த வேண்டும், தண்ணீர் லாரி 6000 லிட்டர் வாங்கியதற்கு பதிலாக முன்பிருந்த 2000 லிட்டர் அளவு லாரி வாங்கி இருந்தால் குறுகிய தெருவிலும் கூட தண்ணீர் விநியோகம் செய்து வரலாம். 6 ஆயிரம் லிட்டர் வாங்கியது பெரிய தெருக்களில் மட்டும் செல்லும் அளவிற்கு இருக்கும். தொடர்ந்து கூட்டங்களில் வரவு செலவு அறிக்கை மாதந்தோறும் வைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். அதை பற்றி எந்தவித பதிலும் வருவதில்லை, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாச்சம்மாள் வித்யாலயா பள்ளி அருகே வீட்டுமனைகள் பிரிக்கப்பட உள்ள நிலையில், மனை அங்கீ காரத்திற்கு நகர மன்றத்தை நாடியுள்ளனர், இதில் வீட்டு மனைகளில் மேல்நிலைத் தொட்டி, சாக்கடை வசதி, சாலை வசதி அடிப் படை வசதிகளுக்கு மொத்தமாக 8 லட்சம் ரூபாய் மட்டுமே நிர்வாகத்துக்கு செலுத்திய தாக தெரிய வருகிறது, இந்தத் தொகையில் எப்படி அடிப்படை வசதிகள் செய்ய முடியும்? கட்டிடம் அங்கீகாரத்திற்கு சென்றால் அங்கீகாரம் கிடைக்க இழுத்தடிக்கப்படு கிறார்கள், அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது, ஒரு கட்டிட அங்கீகாரத் திற்கு எத்தனை ரூபாய் பெறப்படும் என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என கூறி னார்.
இதைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த 14 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவராஜன் பேசுகையில், சாலைப் பணிகள் உரிய அளவீடு இல்லாமல் பற்றாக்குறையாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பதில் கூற முடியவில்லை. சாலை வேலை நடைபெற் றுக் கொண்டிருந்தபோது இன்ஜினியரிடம், கேட்கலாம் என்று சென்ற போது கட்டிடப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். வார்டு பகுதிகளுக்கு அரசு சார்ந்த அதிகாரிகள் வருகை தரும்போது நகர மன்ற உறுப்பி னர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தொடர் ச்சியாக அனைத்து கூட்டங்களிலும் வலியு றுத்தி வருகிறோம். இதனை செய்ய வேண் டும். 27 நகர மன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக தகவல் வருகிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் மூவரும் பணம் பெறுவ தில்லை என்று பொதுமக்களுக்கு வெளிப் படை தன்மையுடன் பிளக்ஸ் பேனர் வைக்கின் றோம். நாச்சம்மாள் பள்ளி அருகே மனை பிரிக்கப்பட்டதில் குறுகிய செலவில் கட்டப்ப டுவதாக தெரியவருகிறது இதனை முறைப்ப டுத்த வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் பார்வதி பேசுகையில் , திருமுருகன்பூண்டியின் பிரதான நகரப் பகுதி 22 ஆவது வார்டு இந்த வார்டுக்கு நிதி ஒதுக்கு வதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. சராச ரியாக ஒவ்வொரு நகர மன்ற உறுப் பினருக்கும் 30 லட்சம் ரூபாய் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் என்னுடைய வார்டிற்கு 18 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளனர். இந்த பாராபட்சத்தை போக்க வேண்டும். போன கூட்டத் திலேயே கவுசிகா நதி பாலத்தில், மின்வி ளக்கு அமைத்துத் தருமாறு வலியுறுத்தப் பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றித் தர வில்லை. உடனே மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பாரதி பேசுகையில், ஊழல் நடை பெற்று உள்ளது. நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் வாங்கியதில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி எடுத்துள்ளனர். அதேபோல பக்கெட் வாங்கியதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுத்துள்ளனர். ஏதாவது பிரச்சனை என்று நகரமன்ற ஆணையரிடம் கேள்வி கேட்டால் தலைவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறுகிறார். இது போன்ற செயல்கள் தொடர்ச்சியாக நடைப்பெறுகிறது. கூட்டம் தொடங்கும் போது மினிட் புத்தகம் கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் ஆன பிறகும் கூட மினிட் புத்தகம் வரவில்லை, மினிட் புத்தகம் வரும் வரை எழுந்து நின்று கொண்டே இருப்பேன் என போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும், மினிட் புத்தகம் வர வேண்டும் என்று எழுந்து நிற்க தொடங்கினர். உடனடியாக மினிட் புத்தகம் வந்த பின்பு அமர் ந்தனர். மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் பிரச்சனை என்று நகராட்சி ஆணையரிடம் முறையிட்டால், தலைவரிடம் கேட்டுக் கூறு கிறேன் என்று கூறிவிடுகிறார். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருந்து வரு கிறது. நகர மன்ற ஆணையரை மாற்ற வேண் டும் என்று 26 நகர மன்ற உறுப்பினர்களும் தலைவரிடம் முறையிட்டனர்.