திருப்பூர், ஆக.26 - திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் வலியு றுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய மான பிரச்சனைகள் குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சனியன்று நேரில் சந்தித்து கோரிக்கை களை வலியுறுத்தினர். உடுமலை வட்டம் திருமூர்த்தி மலை, குருமலை பகுதிகளில் அமைந் துள்ள மலைவாழ் மக்களுக்கு உரிய சாலை வசதிகளை அமைத்து தர நடவ டிக்கை எடுத்திட வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை முழுமையான செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நோயாளிகள் நலச் சங்கத்தை உரு வாக்கி செயல்படுத்திட வேண்டும், பல்லடம் வட்டம் மாணிக்காபுரம் ஊராட்சி கருப்பண்ணசாமி நகர் பகுதியில் வீட்டுமனை பட்டாவுக்காக விண்ணப்பித்திருக்கிற அனைவ ருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும், பல்லடம் முதல் பூமலூர் வரை போடப்படும் சாலையில் கிடாத்துறையில் பிஏபி பாலத்தை விரிவாக்கம் செய்து சாலை அமைக்க வேண்டும்,
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில் விண் ணப்பிக்கும் கிராமப்புற மக்கள் அனை வருக்கும் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பேருந்துகள் தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும், காங்கேயம் நெய்க்காரம்பாளை யத்தில் ஆதிக்க சாதிகளால் வீடு இடிக் கப்பட்ட குத்தகை விவசாயிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலை யில், அரசு சார்பில் வீடு கட்டி தர நட வடிக்கை எடுக்க வேண்டும், விவ சாய இடு பொருட்களான வெங்காயம் மற்றும் தக்காளி விதைகள் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு இன்றி அனைத்து பிரிவு மக்களுக்கும், உரி மையும் சம அந்தஸ்தும் வழங்குவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அவ்வப்போது கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், பல்லடம் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் உட னிருந்து கோரிக்கைகளை வலியுறுத் தினர்.