districts

img

நிதி ஒதுக்கியும், ஓராண்டாக போடப்படாத சாலை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் முறையீடு

திருப்பூர், ஜன.3- திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டுக்கு உட்பட்ட தந்தை பெரியார் நகரில் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி  ஓராண்டு ஆகியும், இன்னும் சாலை அமைக்கப்பட வில்லை. இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் என்.கோபால், நெசவாளர் காலனி கட்சிக் கிளைச் செயலாளர் மகேந்திரன் உள்பட கட்சி அணி யினர் திங்களன்று மக்கள் குறை தீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்த னர்.  இதில் கடந்த பிப்ரவரி மாதம் சாலை அமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் நிலையில் கர்ப்பிணி  பெண்களும், முதியோர் உள்ளிட்ட நோயாளிகள் குண் டும், குழியுமான மோசமான சாலையில் இங்கு வந்து  செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடி யாக இங்கு சாலைப் பணியைத் தொடங்கி செய்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.