திருப்பூர், நவ. 18 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காம நாயக்கன்பாளையம் மயானத்தை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை மனு அளித்தது. இதை ஏற்று இந்த மயானத்தை சீரமைப்பது என்று ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உறுதியளித்தது. பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலை யில், காமநாயக்கன்பாளையம் மயானம் சீர மைக்கப்படாமல் மிக மோசமான நிலை யில் இருந்து வருகிறது. குப்பை கூளமாக வும், தூய்மையான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இந்த மயானத்தை உடனடியாக சீர மைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என வலியுறுத்தி காமநாயக்கன்பா ளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இக்கோரிக்கை மனு ஊராட்சி ஒன்றிய நிர் வாகத்திடம் அளிக்கப்பட்டது. அத்துடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலையிட்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து வியாழக்கிழமை சுல்தான் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் காமநா யக்கன்பாளையம் மயானத்தை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மயா னத்தை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், செய்ய வேண்டிய பணிகள் குறித்து திட்ட அறிக்கை தயாரித்து உடனடியாக சீரமைப்ப தற்கான நடவடிக்கைகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் செய்து தருவதாக வட் டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். காமநாயக்கன்பாளையம் மயானத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன் றிய செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றிய கமிட்டி உறுப்பினர் கே.வி. சுப்பிரமணியம், காமநாயக்கன்பாளையம் கிளைச் செய லாளர் வைஸ்.சுப்பிரமணி, சுல்தான்பேட்டை ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.