districts

img

வரி விதிப்பு பணிகளில் இடைத்தரகர்களா

கோவை, பிப்.5- வரி விதிப்பு பணிகளில் இடைத் தரகர்களை அனுமதிக்ககூடாது என்றும், பொதுமக்களுக்கு கடும் சுமையாக உள்ள குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.  கோவை மாநகராட்சி மன்றக்  கூட்டம், திங்களன்று மேயர் கல் பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்  துணை மேயர் வெற்றி செல்வம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக கூட்டத்தில், சுகாதா ரப் பணிகளை சரிவர செய்யாத தனி யார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மாநக ராட்சி முழுவதும் குவிந்துள்ள குப் பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் கடும் சுமையாக உள்ள குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். சூயஸ் நிறுவனம் மேற் கொள்ளும் பணிகளால் சேதம டைந்த சாலைகளை சீரமைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால், பொது மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின் றனர். எனவே பணிகள் முடிவ டைந்த உடனே துரிதமாக சாலை களை சீரமைக்க வேண்டும். மாநக ராட்சி பகுதிகளில் அதிகரிக்கும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். மாமன்ற  வார்டுகளில் மாநகராட்சியால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட 109 தீர்மானங்கள் முன் மொழி யப்பட்டு, 107 தீர்மானங்கள் ஏற்றுக்  கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழு  தலைவர் வி.இராமமூர்த்தி பேசுகை யில், பட்டா இல்லாமல் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர் இணைப்பு தர மாநகராட்சி சார்பில்  முயற்சிக்க வேண்டும். கோவை மாநகராட்சி வரி விதிப்பு பணிகளில்  இடைத்தரகர்களை ஈடுபடுத்த அனு மதிக்காமல், மாமன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் மூலம்  நேரடியாக விண்ணப்பம் பெற்று  வரிவிதிப்பு செய்து கொடுக்க வேண்டும். தெரு விளக்குகள் பொருத்தும் பணிகளை வேகப்ப டுத்தி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.  இதேபோன்று, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் பூபதி பேசுகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் கோவை மாந கராட்சி வார்டுகளில் பெறப்பட்ட மனுக்கள் பற்றியும், அதன் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித் தும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கீதாஞ் சலி பள்ளி நிர்வாகம் ஓடை புறம் போக்கு இடத்தை ஆக்கிரமித்தும்,  நகராட்சியின் முழுமையான கட்டிட  அனுமதி இல்லாமலும் கட்டிடங் களை கட்டியுள்ளனர். அதுமட்டு மின்றி, பள்ளி வளாகத்தில் உள்ள  திட்ட சாலையை மாநகராட்சி கவ னத்திற்கு இல்லாமல் ரத்து செய் துள்ளனர். இவ்விவகாரத்தில், மாந கராட்சி தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட் டுக்கொண்டார். 13 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் என்.சுமதி  பேசுகையில், ஒவ்வொரு மண்ட லத்திற்கும் தூய்மை பணிகளுக் கான பொருட்கள் வாங்குவதற்கு ரூபாய் பத்து லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கை யில் உள்ள பொருட்களின் விலை கள் கூடுதலாக தெரிகிறது என்றார்.  வார்டு பகுதியில் உள்ள செடிகள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற வார்டுகளுக்கு இயந்திரங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி னார்.