சேலம், ஜன.24– தலைவாசல் அருகே உள்ள துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் அடித்ததால் பள்ளி மாணவி பார்வையை இழந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித் துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல், மும்முடி எம்ஜிஆர் நகர் பகுதி யைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி யான இவரது மகள் கங்கையம்மாள் (10), தலைவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள் ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த டிச.22 ஆம் தேதியன்று பள்ளியில் வகுப்பறையில் இருந்த போது, பள்ளியின் தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரு மான திருமுருகவேல் என்பவர் பாடம் நடத்தி யுள்ளார். மாணவிகளிடம் பாடம் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, கங்கையம்மாள் அருகிலிருந்த மாணவியை அடிப்பதற்காக குச்சியை தூக்கி வீசியுள் ளார். அப்போது கங்கையம்மாள் இடது கண் மீது குச்சி விழுந்ததில் அலறி துடித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு தலைவாசல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், ஆத்தூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சேலம், மதுரை உள்ளிட்ட தனியார் கண் மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கண் பரிசோதனை செய் ததில் 95 சதவிகிதம் கண்பார்வை இழந்துள்ள தாக தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார், சம்பந்தப்பட்ட பள்ளி தலை மையாசிரியர் திருமுருகவேல் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மற்றும் ஆத்தூர் துணைக் காவல் கண்காணிப் பாளர் நாகராஜன் ஆகியோரை நேரில் சந் தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் ரமேஷ் இதுகு றித்து, ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறைரீதி யான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் கள், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும் பத்தாருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகத்தை நேரில் சந்திந்து மனு அளித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவியை தாக்கிய ஆசிரியரை கைது செய்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்வில் பாதிக்கப் பட்ட மாணவி கங்கையம்மாள், அவரின் பெற் றோர், சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், ஆத்தூர் தாலு காச் செயலாளர் ஏ.முருகேசன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.எம்.தேவி, மாவட்டத் தலைவர் ஆர். வைரமணி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, துணைத்தலைவர் கே.ராஜாத்தி ஆகியோர் உடனிருந்தனர். இதனிடையே, தலைமையாசிரியர் திருமுருகவேல் மீது தலைவாசல் காவல் துறையினர் எஸ்சி/எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.