districts

img

சேவூர் தீண்டாமைச் சுவர் இடித்து அகற்றம்திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

அவிநாசி, பிப்.10- அவிநாசி சேவூர் பகுதியில் இருந்த தீண்டாமைச்சுவர் அகற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை ஏற்று மாவட்ட நிர்வாகம் இச்  சுவரை அகற்றியது.  அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட் சிக்குட்பட்ட தேவேந்திரர்நகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட பட்டியலின மக்  கள் பல்லாண்டுகளாக வசித்து வருகின்ற னர். இந்தநிலையில் கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு, இப்பகுதிக்கு முன்புற முள்ள காலி இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து விஐபி நகர் என பெயரிட்டு விற் பனை செய்ய ஆரம்பித்தனர். இதில், பட்டி யலின மக்களின் வாழ்விடத்தை மறைத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்பியுள்ளனர். இச்சுவர் கட்டும்போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இம்மனைகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு, அதன் சாலை களும் பொதுமனைகளும் ஊராட்சி நிர்வா கத்துக்கு ஒப்படைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்த பிறகும் அந்த சுவர் இடிக்கப் படாமல் அப்படியே இருந்தது.  இது குறித்து அங்குள்ள சமூக ஆர்வ லர்கள் கடந்த ஆண்டு  அவிநாசி ஒன்றிய  ஊராட்சி நிர்வாகங்களுக்கு பலமுறை  மனு கொடுத்தும், நேரில் வலியுறுத்தியும்  எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலை யில் மாவட்ட ஆட்சியருக்கும், மாநில எஸ்.சி./எஸ்.டி., ஆணையத்துக்கும் புகார்  மனுக்களை அனுப்பினர். இதனை ஆட்சி யர், தீண்டாமை சுவர்தான் என்றும், அதை உடனடியாக அகற்ற (நகல் 8223/ 2023 (02/06/2023) வட்டார வளர்ச்சி அலு வலர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் ஏழு  மாதங்கள் கடந்த பின்பும் தீண்டாமைச் சுவர் இடிக்கப்படாமல் இருந்தது. தீண்டா மைச் சுவரை உடனடியாக இடித்து அகற்  றிட வேண்டும், பட்டியலின மக்களின் குடி யிருப்பை மறைத்து தீண்டாமைச்சுவர் எழுப்பிய விஐபி நகர் மனை விற்பனை யாளர்கள் மீது சட்டப்படியான நட வடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றிய குழு சார்பில் மாவட்ட நிர்வாகத்தி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இவ்விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ. முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்து தலையிட்டு வந்த னர். மேலும், சார் ஆட்சியர், திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர், அவிநாசி வட்டாட்சி யர்,அவிநாசி வட்டார வளர்ச்சி அலு வலர் ஆகியோருக்கு இச்சுவர் இடிக்கப்பட  வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில குழு சார்பிலும் அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.  இதன் விளைவாக சனியன்று, மாலை  வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சி யர், காவல்துறையினர் ஆகியோர் முன்னி லையில், இந்த தீண்டாமைச் சுவர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றப் பட்டது.