districts

img

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு சிபிஎம், சிஐடியு ஆறுதல்

நாமக்கல், மே 20- பட்டுதறி பட்டறை வேலை செய் யும் போது, மின்சாரம் தாக்கி உயி ரிழந்தவரின் குடும்பத்தாரை மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தலை வர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (40). விசை தறி தொழிலாளியான இவர் பட்டு நெய்தல் தறி வேலை செய்து வந்தார். கடந்த 14 ஆம் தேதியன்று பணிபுரியும் இடத்தில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.  இந்நிலையில், அவரின் இல்லத்திற்கு சென்ற சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில பொருளாளர் எம்.அசோகன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ், சிபிஎம் ராசிபுரம் நகர செயலாளர் ஜி.செல்வ ராஜ், நகர கிளை செயலாளர் சி.சண்முகம் ஆகியோர் உயிரிழந்த தொழிலாளி ராஜனின் குடும்பத்தா ருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண் டும். அரசு சார்பில் இலவச வீட்டு நிலம் வழங்க வேண்டும்.இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படும்போது தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதிப டுத்தும் வகையில் இன்சூரன்ஸ் திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.