திருப்பூர், ஆக. 17 – திருப்பூர் மாநகராட்சி 23ஆவது வார் டில் ஆழ்குழாய் பழுதடைந்திருப்ப தால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளது. எனவே ஆழ்குழாய் பழுதை உடனடியாக நீக்க வேண்டும் என்று மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்த னர். மார்க்சிஸ்ட் கட்சியின் தியாகி பழ னிச்சாமி நகர் கிளை சார்பில் மேயர் ந. தினேஷ்குமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 23 ஆவது வார்டு தியாகி பழனிச்சாமி நக ரில் ஆழ்துளைக் கிணற்றுக் குழாயில் அடைப்பு மற்றும் பழுது காரணமாக சில வீதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட் டுள்ளது. சில பகுதிகளில் மிகக்குறை வான நீர் விநியோகம் நடைபெறுகிறது. எனவே மேற்படி குழாய்களின் பழுதை நீக்க வேண்டும். அத்துடன் 24ஆவது வார்டு பகுதி யில் இருந்து வரும் கழிவுநீர் பாதை முறையாக வடிவமைக்கப்படாத நிலை யில், கழிவுநீர் அடிக்கடி வெளியேறி பிர தான சாலையில் தேங்குகிறது. மேலும் மழைக் காலங்களில் தியாகி பழனிச் சாமி நகர் குடியிருப்பில் உள்ள வீதி களிலும், வீடுகளிலும் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. எனவே கழிவுநீர் பாதையை அகலப்ப டுத்தி, அடைப்புகளை நீக்க வேண்டும். இப்பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கும் வகையில் மேம்ப டுத்த வேண்டும். பழுதடைந்த தார் மற் றும் காங்கிரீட் சாலைகளை சீரமைக்க வேண்டும். தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை போதிய மருத்துவர்கள், பணியாளர்களுடன் திறப்பு விழா செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேயரிடம் மனுக் கொடுத்த நிகழ் வில் கட்சியின் கிளைச் செயலாளர் இளங்கோவுடன், மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.மைதிலி, வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உள் பட அப்பகுதி கட்சி அணியினர் பங்கேற் றனர்.